கோவை சிறைக்கு மீண்டும் அன்சாரி மாற்றம் ! சிறைத்துறை அமைச்சர் உறுதி !!
முஸ்லிம் லீக்கின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு !!!
சென்னை : கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஆயுள் கைதி அன்சாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்ற சிறைத்துறை அமைச்சர் அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், காயிதேமில்லத் பேரவையின் அகில உலக ஒருங்கிணைப்பாளருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து ஓரிரு நாளில் அன்சாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவை சிறையில் உள்ள 52 ஆயுள் கைதிகளும் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதனையடுத்து அக்குடும்பத்தாரின் கோரிக்கையினையடுத்து சிறைத்துறை ஐ.ஜி. யாக இருந்த திருமிகு ஷியாம் சுந்தர் அவர்களை வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் சந்தித்து இது போன்ற மாற்றம் நிகழாத சூழ்நிலையினை ஏற்படுத்தினார்.
( தற்பொழுது ஷியாம் சுந்தர் அவர்கள் சிறைத்துறை ஐ.ஜி. பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார் )
சிறைத்துறை அமைச்சர் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வீணாக ஆர்ப்பாட்டம், போராட்டம் ஏதும் நடத்தாமல் முறையாக அணுகி சிறைக்கைதிகளின் கோரிக்கையினை அன்போடும், தகுந்த முறையிலும் உரிய இடத்தில் சேர்க்கும் முறை வரவேற்கத்தக்கது என்றார்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label சிறை. Show all posts
Showing posts with label சிறை. Show all posts
Friday, July 30, 2010
Tuesday, June 1, 2010
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள்
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள்
கோவை உக்கடத்தில் உள்ள லாரிபேட்டை மைதானத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் மாவட் டத் தலைவர் எஸ்.எம். காசிம் தலைமை யில் மாநிலத் துணைத் தலைவர் எல்.எம். அப்துல் ஜலீல் கோவை மண்டல இளை ஞர் அணி அமைப் பாளர் பி. முஹம்மது பஷீர், மாநகராட்சி உறுப்பினர் மெஹருன்னிசா சாகுல் ஹமீது ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. மாநகரத் தலைவர் டி.ஏ. அப்துல் நாசர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், கோவை மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். உசைன், செயலாளர் ஏ.என். அசன்பாபு, திருப்ப+ர் மாவட்டத் தலைவர் பி. ஹம்சா, செயலாளர் மங்களம் அக்பர் அலி ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியில் சிறப்புரையாற்றிய காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., குறிப்பிட்டதாவது-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற இருக்கிறது. இம் மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் வாழ்த்தி வர வேற்கிறது. இம் மாநாட்டிற்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வரும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இம் மாநாட்டில் சமுதாயத்தினர் பெருமளவில் பங்குபெற வேண்டுகோள் விடுத்து வருகிறது.
சரித்திரத்தில் மிகச் சிறந்த உலக மாநாடுகளில் ஒன்றாக நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிகழ்த்தப்பட உள்ளன. அந்த சிறப்புக்களில் ஒன்றாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து வரலாற்று அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வர் முத்தமிழ் கலைஞரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
யாரும் சிறை செல்வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எந்த ஒரு கால கட்டத்திலும் காரணமாக இருந்ததில்லை. அதை ஊக்குவித்ததும் இல்லை. அப்படிப்பட்ட செயலை தூண்டிவிட்டதும் இல்லை. இன்று சிறையில் இருப்போர் யாருடைய தூண்டுதலால் அல்லது உணர்ச்சிவசத்துக்கு ஆளாகி சிறையில் இருக்கிறார்கள் என்பதை பார்க்காமல் அவர்களுடைய விடுதலைக்கு இன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் குரல் கொடுக்கிறது அவசரப்பட்டு தூர நோக்கு பார்வையில்லாமல் எதிர்கால விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று காரியங்களை செய்யக் கூடியவர்களின் அழைப்புகளில் தடுமாறி விழுந்து இன்று நிர்க்கதியாகி சிறைக் கொட்டடிகளில் தங்கள் காலக் கிரகத்தை அனுபவிப்பதோடு அவர்களுடைய குடும்பங்களையெல்லாம் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கிவிட்டார்கள்.
இந்த துன்பமும், துயரமும் தொடர் கதையாகிக் கொண்டே போகக்கூடாது என்பதற்காக சிறைவாசிகளுடைய விடுதலைக்கு தாய்ச்சபை குரல் கொடுத்தது. வரலாறு படைத்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் கலைஞர் முன்னிலையில் நம் தலைவர் பேராசிரியர் முன்வைத்த கோரிக்கையின் காரணத்தால் ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் விடுதலை பெற்றனர். தற்போது 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். கருணையின் அடிப்படையில் அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
குணங்குடி ஹனீபா விடுதலை
13 ஆண்டு காலம் சிறையில் இருந்த குணங்குடி ஆர். ஹனீபா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்தது. தமிழக முதல்வர் கலைஞரையும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலான இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தூதுக்குழு சந்தித்தது. அவர்களும் சில சமிக்கைகளை தெரிவித்தார்கள். அந்த தகவல்கள் எல்லாம் குணங்குடி ஹனீபாவின் குடும்பத்தாருக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையால் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு சில நாட்களில் வெளியாகும் குணங்குடி ஹனீபா உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை எங்களைப் போல் தெரிந்து கொண்டவர்கள், தீர்ப்பு வெளியாகும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னதாக நீதிமன்ற முற்றுகை என ஒரு போராட்டத்தை அறிவித்து விளம்பரத்தை தேடிக்கொண்டார்கள். விளம்பரத்தின் வெளிச்சமே இல்லாமல் அந்த விளம்பரத்தின் மூலம் சொந்த ஆதாயத்தை எதிர்பார்க்காமல் தாய்ச்சபை செயல் படுகின்ற போது விளம்பரத்தை மட்டுமே முன்னி லைப்படுத்தி வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று சொன்னால் அதை என்ன சொல்வது?
நீதிமன்ற தீர்ப்பு கிடைப்பதற்கு நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்துவது அர்த்தமற்ற ஒன்று என்று சாதாரண சாமானியர்கள் அறிவார்கள். அந்த ஆர்ப்பாட் டத்தை நடத்திய தலைவர்களுக்கும் இது தெரியும். ஆனால், மற்றவர்களை யெல்லாம் செயல்படா தவர்கள் என்றும், தாங்கள் மட்டும்தான் போராடக் கூடியவர்கள் என்றும் விளம்பரம் செய்வதற்காக இந்த விடுதலையை பயன் படுத்திக் கொண்டார்கள். எண்ணற்ற இளைஞர்கள் அநியாயமாக சிறை செல்வதற்கு யார் காரணம்? என்பதற்கும், அவர்கள் சிறை புகுந்ததால் யாருக்கு ஆதாயம் என்பதும் இந்த சமுதாயத்துக்கு நன்கு தெரிந்ததே.
சிறைவாசிகள் குடும்பம் சந்திப்பு
இன்று கோவை வந்த நான் சிறைவாசிகளுடைய குடும்பத்தாரை சந்தித்தேன். அவர்கள் கண்கலங்கிய காட்சி எங்கள் சகோதரன் வெளியின் வந்தால்தான் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என சிறை வாசிகளின் சகோதரிகள் செய்த உறுதி அவர்கள் படுகின்ற துயரங்கள் அனைத்தையும் நேரில் தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு வந்தேன். ஆறுதல் கூறுவதுடன் எங்கள் பணி நின்று விடவில்லை. தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து விட்ட வர்களின் நலனுக் கான இன்று நாங்கள் பாடுபடுகிறோம்.
ஆயுள் சிறைவாசியாக இருக்கும் இளைஞர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து மிகுந்த சிரமத் தில் சிறையில் இருந்தார். அபுதாஹிர் என்று அந்த இளைஞருக்கு 3 பரோல் விடுப்புகளுக்கு நாங்கள் முயற்சி செய்தோம். பல சிறைவாசிகளுடைய பரோல் விடுப்புகளுக்கும் நாங்கள் முயற்சி செய்துள் ளோம். இவைகளையெல் லாம் சொல்லி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சாதி அரசி யல் நடத்தக் கூடிய இயக் கம் அல்ல. இஸ்லாம் வழி நடத்துகின்ற மனித நேயம், சமூக நல்லிணக்கம், நம்மு டைய கலாச்சார தனித் தன்மை பாதுகாத்தல் இவைகளை லட்சியமாக கொண்டுதான் செயல்படு கிறது. மத துவேஷங்களை உருவாக்கக்கூடிய எதையும் நாங்கள் செய்வதில்லை. பேசுவதும் இல்லை. மத துவேஷத்தை வளர்க்கின்ற வகையில் முஸ்லிம்கள் கடையில் சாமான்கள் வாங்காதீர்கள் என்று ஒரு காலகட்டத்தில் சொல்லப் பட்டபோது கூட, அதற்கான பதிலை அவர்கள் பாணியில் சொல் லாமல் சகோதரத்துவத்தை வலியுறுத்தி நாம் பிரச்சாரம் செய்த காரணத்தால் அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.
எனவே, உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கின்ற பணியில் நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு எம். அப்துர்ரஹ்மான் எம்.பி. உரையாற்றினார்.
ஆரம்பமாக குனிய முத்தூர் இமாம் அப்துல் ரஹ்மான் ஜமாலி இறை மறை ஓதினார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம். இப்ராஹீம் நன்றி கூறினார்.
கோவை உக்கடத்தில் உள்ள லாரிபேட்டை மைதானத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் மாவட் டத் தலைவர் எஸ்.எம். காசிம் தலைமை யில் மாநிலத் துணைத் தலைவர் எல்.எம். அப்துல் ஜலீல் கோவை மண்டல இளை ஞர் அணி அமைப் பாளர் பி. முஹம்மது பஷீர், மாநகராட்சி உறுப்பினர் மெஹருன்னிசா சாகுல் ஹமீது ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. மாநகரத் தலைவர் டி.ஏ. அப்துல் நாசர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், கோவை மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். உசைன், செயலாளர் ஏ.என். அசன்பாபு, திருப்ப+ர் மாவட்டத் தலைவர் பி. ஹம்சா, செயலாளர் மங்களம் அக்பர் அலி ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியில் சிறப்புரையாற்றிய காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., குறிப்பிட்டதாவது-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற இருக்கிறது. இம் மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் வாழ்த்தி வர வேற்கிறது. இம் மாநாட்டிற்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வரும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இம் மாநாட்டில் சமுதாயத்தினர் பெருமளவில் பங்குபெற வேண்டுகோள் விடுத்து வருகிறது.
சரித்திரத்தில் மிகச் சிறந்த உலக மாநாடுகளில் ஒன்றாக நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிகழ்த்தப்பட உள்ளன. அந்த சிறப்புக்களில் ஒன்றாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து வரலாற்று அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வர் முத்தமிழ் கலைஞரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
யாரும் சிறை செல்வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எந்த ஒரு கால கட்டத்திலும் காரணமாக இருந்ததில்லை. அதை ஊக்குவித்ததும் இல்லை. அப்படிப்பட்ட செயலை தூண்டிவிட்டதும் இல்லை. இன்று சிறையில் இருப்போர் யாருடைய தூண்டுதலால் அல்லது உணர்ச்சிவசத்துக்கு ஆளாகி சிறையில் இருக்கிறார்கள் என்பதை பார்க்காமல் அவர்களுடைய விடுதலைக்கு இன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் குரல் கொடுக்கிறது அவசரப்பட்டு தூர நோக்கு பார்வையில்லாமல் எதிர்கால விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று காரியங்களை செய்யக் கூடியவர்களின் அழைப்புகளில் தடுமாறி விழுந்து இன்று நிர்க்கதியாகி சிறைக் கொட்டடிகளில் தங்கள் காலக் கிரகத்தை அனுபவிப்பதோடு அவர்களுடைய குடும்பங்களையெல்லாம் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கிவிட்டார்கள்.
இந்த துன்பமும், துயரமும் தொடர் கதையாகிக் கொண்டே போகக்கூடாது என்பதற்காக சிறைவாசிகளுடைய விடுதலைக்கு தாய்ச்சபை குரல் கொடுத்தது. வரலாறு படைத்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் கலைஞர் முன்னிலையில் நம் தலைவர் பேராசிரியர் முன்வைத்த கோரிக்கையின் காரணத்தால் ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் விடுதலை பெற்றனர். தற்போது 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். கருணையின் அடிப்படையில் அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
குணங்குடி ஹனீபா விடுதலை
13 ஆண்டு காலம் சிறையில் இருந்த குணங்குடி ஆர். ஹனீபா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்தது. தமிழக முதல்வர் கலைஞரையும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலான இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தூதுக்குழு சந்தித்தது. அவர்களும் சில சமிக்கைகளை தெரிவித்தார்கள். அந்த தகவல்கள் எல்லாம் குணங்குடி ஹனீபாவின் குடும்பத்தாருக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையால் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு சில நாட்களில் வெளியாகும் குணங்குடி ஹனீபா உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை எங்களைப் போல் தெரிந்து கொண்டவர்கள், தீர்ப்பு வெளியாகும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னதாக நீதிமன்ற முற்றுகை என ஒரு போராட்டத்தை அறிவித்து விளம்பரத்தை தேடிக்கொண்டார்கள். விளம்பரத்தின் வெளிச்சமே இல்லாமல் அந்த விளம்பரத்தின் மூலம் சொந்த ஆதாயத்தை எதிர்பார்க்காமல் தாய்ச்சபை செயல் படுகின்ற போது விளம்பரத்தை மட்டுமே முன்னி லைப்படுத்தி வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று சொன்னால் அதை என்ன சொல்வது?
நீதிமன்ற தீர்ப்பு கிடைப்பதற்கு நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்துவது அர்த்தமற்ற ஒன்று என்று சாதாரண சாமானியர்கள் அறிவார்கள். அந்த ஆர்ப்பாட் டத்தை நடத்திய தலைவர்களுக்கும் இது தெரியும். ஆனால், மற்றவர்களை யெல்லாம் செயல்படா தவர்கள் என்றும், தாங்கள் மட்டும்தான் போராடக் கூடியவர்கள் என்றும் விளம்பரம் செய்வதற்காக இந்த விடுதலையை பயன் படுத்திக் கொண்டார்கள். எண்ணற்ற இளைஞர்கள் அநியாயமாக சிறை செல்வதற்கு யார் காரணம்? என்பதற்கும், அவர்கள் சிறை புகுந்ததால் யாருக்கு ஆதாயம் என்பதும் இந்த சமுதாயத்துக்கு நன்கு தெரிந்ததே.
சிறைவாசிகள் குடும்பம் சந்திப்பு
இன்று கோவை வந்த நான் சிறைவாசிகளுடைய குடும்பத்தாரை சந்தித்தேன். அவர்கள் கண்கலங்கிய காட்சி எங்கள் சகோதரன் வெளியின் வந்தால்தான் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என சிறை வாசிகளின் சகோதரிகள் செய்த உறுதி அவர்கள் படுகின்ற துயரங்கள் அனைத்தையும் நேரில் தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு வந்தேன். ஆறுதல் கூறுவதுடன் எங்கள் பணி நின்று விடவில்லை. தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து விட்ட வர்களின் நலனுக் கான இன்று நாங்கள் பாடுபடுகிறோம்.
ஆயுள் சிறைவாசியாக இருக்கும் இளைஞர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து மிகுந்த சிரமத் தில் சிறையில் இருந்தார். அபுதாஹிர் என்று அந்த இளைஞருக்கு 3 பரோல் விடுப்புகளுக்கு நாங்கள் முயற்சி செய்தோம். பல சிறைவாசிகளுடைய பரோல் விடுப்புகளுக்கும் நாங்கள் முயற்சி செய்துள் ளோம். இவைகளையெல் லாம் சொல்லி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சாதி அரசி யல் நடத்தக் கூடிய இயக் கம் அல்ல. இஸ்லாம் வழி நடத்துகின்ற மனித நேயம், சமூக நல்லிணக்கம், நம்மு டைய கலாச்சார தனித் தன்மை பாதுகாத்தல் இவைகளை லட்சியமாக கொண்டுதான் செயல்படு கிறது. மத துவேஷங்களை உருவாக்கக்கூடிய எதையும் நாங்கள் செய்வதில்லை. பேசுவதும் இல்லை. மத துவேஷத்தை வளர்க்கின்ற வகையில் முஸ்லிம்கள் கடையில் சாமான்கள் வாங்காதீர்கள் என்று ஒரு காலகட்டத்தில் சொல்லப் பட்டபோது கூட, அதற்கான பதிலை அவர்கள் பாணியில் சொல் லாமல் சகோதரத்துவத்தை வலியுறுத்தி நாம் பிரச்சாரம் செய்த காரணத்தால் அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.
எனவே, உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கின்ற பணியில் நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு எம். அப்துர்ரஹ்மான் எம்.பி. உரையாற்றினார்.
ஆரம்பமாக குனிய முத்தூர் இமாம் அப்துல் ரஹ்மான் ஜமாலி இறை மறை ஓதினார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம். இப்ராஹீம் நன்றி கூறினார்.
Monday, July 7, 2008
உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்
உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.
இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.
ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.
பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.
முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.
இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.
ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.
இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.
நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.
அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.
-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=86
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.
இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.
ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.
பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.
முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.
இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.
ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.
இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.
நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.
அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.
-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=86
Subscribe to:
Posts (Atom)