Friday, August 6, 2010

சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர் ஷிஹாப் தங்ஙள்

சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர் ஷிஹாப் தங்ஙள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது புகழாரம்

புதுடெல்லி, ஆக.5-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் செய்யது முஹம் மதலி ஷிஹாப் தங்ஙள், சமூக நல்லிணக்கத்துக்கும் - மதச்சார்பற்ற ஒற்றுமைக் கும் பாடுபட்டவர் என்று அவரது தபால் தலை வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய ரயில்வே துறை இணைய மைச்சரும், இந் திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத்தலைவருமான இ.அஹமுது புகழாரம் சூட்டி னார்.

தபால் தலை வெளியீடு
சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙளின் தபால் தலை வெளியீட்டு விழா புதுடெல்லியில் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி நடை பெற்றது. தபால் தலையை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரவேற்புரை நிகழ்த்திய இ. அஹமது கூறியதாவது-

மறைந்த தலைவர் செய்யது முஹம் மதலி அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களின் நினைவு தபால் தலையை வெளியிட முடிவெடுத்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நான் எனது சார்பாகவும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பாகவும் இதயங் கனிந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

எப்போதெல்லாம் நான் பிரதமரை சந்திக்கின் றேனோ அப்போதெல் லாம் அவர் ஷிஹாப் தங் ஙள் அவர்களுக்கு அவரது நல்வாழ்த்துக்களையும், பெருமதிப்பையும் தெரி வித்துக் கொள்ளும்படி கூறுவார். அவரது இந்த பெருந்தன்மைக்கு நன்றி கூறுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எங் களது மறைந்த தலைவரின் பால் சோனியாகாந்தி கொண்டிருந்த பற்றிற்கும், பரிவிற்கும் நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இ.ய+. முஸ்லிம் லீக் -
காங்கிரஸ் உறவு

மறைந்த தங்ஙள் சாஹிப் அன்னை சோனியா காந்தியை சந்தித்த போது அவர் காங்கிரசுக்கும், முஸ்லிம் லீகுக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு நீடித்து வருகிறது என்றும், அதை அவரது மாமியார் இந்திரா காந்தியும் தங்ஙள் அவர் களின் மாமனார் செய்யது அப்துர் ரஹ்மான் பாபாக்கி தங்ஙள் ஆகியோ ரும் தொடங்கி வைத்தார் கள் என்றும் அதனை நான் எதிர்காலத்தில் தொடர்ந்து கொண்டு செல்ல வேண் டும் என்று கூறியதையும் நான் இங்கு நினைவுகூரு கிறேன்.

ஷிஹாப் தங்ஙள் அவர் கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தின் வழிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 1936 மே மாதம் 4-ம் தேதி மலப்புரத்தில் பிறந்த தங்ஙள் பானக்காடு சையத் அஹமது ப+க் கோயா தங்ஙள் அவர்க ளின் மூத்த மகனாவார்.
முஸ்லிம் லீகின்

ஒப்பற்றத் தலைவர்

தங்ஙள் சாஹிப் உயர்நிலைக் கல்வியையும், ஆரம்ப மதக் கல்வியையும் முடித்த பிறகு எகிப்து சென்று அங்கே அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத் தில் அரபி மொழியில் மேற்பட்டப்படிப்பை முடித்தார். 1975-ல் அவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் கேரள மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். அந்த பொறுப்பில் 2009-ல் அவர் மறையும்வரை இருந்தார். தங்ஙள் சாஹிப் கேரளா வில் முஸ்லிம் சமூகத்தில் ஒப்பற்றத் தலைவராக விளங்கினார்.

நூற்றுக்கணக்கான மஹல்லாக்களில் காஜி யாக இருந்திருக்கிறார். கேரளாவிலும் மற்ற தென் னிந்திய பகுதிகளிலும் ஏராளமான கல்வி, சமூக இவற்றின் கலாச்சார நிறுவ னங்களின் பாதுகாவலராக இருந்திருக்கிறார் அவரி டம் வாழ்த்துக்களையும், வழிகாட்டல்களையும் பெறுவதற்கு ஏராளமான பேர் கூடும் யாத்ரீகர்கள் ஸ்தலம்போல் அவர் வீடு விளங்கியது.

கல்வி வளர்ச்சிக்கு
பாடுபட்டவர்

மலபார் பகுதியில் பின் தங்கிய ஊர்களில் தரமான கல்வியை வழங்குவதற்கு அவர் பல கல்வி நிறுவனங் களை ஏற்படுத்தினார்.

அவரது மறைவால் கேரளா ஒரு உன்னதமான பெருமகனை இழந்து விட்டது. தங்ஙள் சாஹிப் வளைகுடா நாடுகளிலும் பிரபலமடைந்திருந்தார். அரபு நாடுகளின் அரச குடும்பத்தினருடனும், மற்ற தலைவர்களுடனும் அவர் நேரடி தொடர்பு வைத்திருந்தார். இந்திய - அரபு நாடுகளின் உறவுக்கு அவர் ஒரு நல்லெண்த் தூதராக விளங்கினார்.
அவர் சமூக நல்லிணக் கம், மதச்சார்பற்ற ஒற் றுமை ஆகியவற்றுக்காக தொடர்ந்து பாடுபட்டார். அனைத்து வகையான வன்முறைகளையும் கைவிட வேண்டும் என்று மக்களை அவர் வற்புறுத் தினார்.

மத நல்லிணக்கத்துக்கு
உழைத்தவர்

1992-ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, அவர் மக்களை அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தார். அவரது அழைப்பு கேரளாவில் அதிசயத்தை ஏற்படுத்தி யது. இந் நிகழ்வு ஷிஹாப் தங்ஙளுக்கு மக்கள் மத்தி யில் உள்ள செல்வாக்கை காட்டுகிறது.

அவருடன் அரசியல் ரீதியில் கருத்து மாறு பாடுகள் கொண்டிருந்தவர் கள்கூட அவரிடம் மதிப்பு காட்டினார்கள். தங்ஙள் சாஹிப் 2009 ஆகஸ்டு 1-ம் தேதி மறைந்து விட்டார். அப்போது அவரது இல்லத்திற்கு சாரிசாரியாக இறுதி மரியாதை செலுத்த வந்த மக்கள் கூட்டம் அவர் மீது கொண்டிருந்த பாசம், நேசம், நன்மதிப்பு ஆகிய வற்றை உணர்த்தியது.
இந்த தேசத்தின் மிக உன்னதமான தலைவர் களில் ஒருவராக அவரை வரலாறு அங்கீகரித்து நினைவ+ட்டுகிறது. அல்லாஹ் அவர்களின் நற் செயல்களை அங்கீகரித்து நல்லடியார்கள் கூட்டத் தில் சேர்த்தருள்வானாக.

இவ்வாறு இ.அஹமது குறிப்பிட்டார்.

Thursday, August 5, 2010

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த முஸ்லிம் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த முஸ்லிம் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி

http://muslimleaguetn.com/news.asp

நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக புலம் பெயர்ந்தோர் விட்டுச் சென்ற சொத்துக்கள் தொடர்பான எனிமி பிராபர்டீஸ் பில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது நிறுத்தப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏராளமானோர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தா னுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர். அப்படி அவர்கள் புலம் பெயர்ந்தபோது தங்கள் சொத்துக்களை அப்படி அப்படியே விட்டுச் சென் றனர். அந்த சொத்துக்களை புலம் பெயர்ந்தோரின் வாரிசுகள் மற்றும் உறவி னர்கள் அனுபவித்து வந் தனர். இந்த சொத்துக் களில் பல அறக்கட்டளை களாகவும், முஸ்லிம்களின் நலனுக்கு பயன்படக் கூடியதாகவும் இருந்து வந் துள்ளன.
எனிமி பிராபர்டீஸ் பில்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று விட்டவர்கள் விட்டுச் சென்ற இந்த சொத்துக் களை அரசே கையகப் படுத்த வகை செய்யும் மசோதா நடப்பு நாடாளு மன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட இருந் தது. இந்த மசோதா நிறை வேற்றப்பட்டால் உச்சநீதி மன்றம் உள்ளிட்ட இந்தி யாவின் எந்த ஒரு நீதி மன்றமும் இந்த விவகாரத் தில் தலையிட முடியாது என்றும், எந்த விசாரணையு மின்றி அரசே இதை கையகப்படுத்தும் என்றும் கூறப்பட்டிருந்தது.
எனிமி பிராப்பரிட்டீஸ் பில் என்ற இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட் டால் பஞ்சாப், மகாராஷ் டிரா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களிலும், தென் னகத்திலும் ஏராளமான முஸ்லிம்கள் பாதிக்கப்படு வர் என்பதை உணர்ந்த முஸ்லிம் தலைவர்கள் இதை தடுக்கும் முயற்சியில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.
முஸ்லிம் எம்.பி.க்கள் ஆலோசனை
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் உறுப்பினர்களின் ஆலோ சனை கூட்டம் நாடாளு மன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் ரஹ்மான்கான் இல்லத்தில் நேற்று மாலை (ஆக‌ஸ்ட் 3-ம் தேதி) நடைபெற்றது. பிரதமரை சந்தித்து முறையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங் களவை துணைத் தலைவர் ரஹ்மான்கான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹமது, மத்திய மரபுசாரா எரி சக்தித் துறை அமைச்சர் பருக் அப்துல்லா, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச் சர் சல்மான் குர்ஷித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட 26 முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர்.
எனிமி பிராப்பரிட்டீஸ் பில்| என்ற பெயரில் கொண்டு வரப்பட உள்ள இந்த மசோதா தேவையற்ற சர்ச் சைகளையும், விளைவு களையும் உருவாக்கும். புலம் பெயர்ந் தோர் விட்டுச் சென்ற சொத்துக்களை எனிமி பிராப்பரிட்டீஸ் என அழைக்கப்படுவது தேவையற்றது.
இதை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் ஏற்கவில்லை என்றும் எனவே, இதனை தாக்கல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரதமர் உத்தரவு
நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் கோரிக் கைகளை கவனமாகக் கேட்ட பிரதமர் உடனடி யாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை தொடர்பு கொண்டு எனிமி பிராப் பரிட்டீஸ் பில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை நிறுத்த கேட்டுக் கொண் டார்.
பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப் படுவது நிறுத்தப்பட்டது. இது நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் ஒட்டுமொதத முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com

மணிச்சுடர் நாளிதழ் ரமளான் சிறப்பு மலர் 2010

மணிச்சுடர் நாளிதழ் ரமளான் சிறப்பு மலர் 2010

அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
உங்களுடன் ….

உண்மை சொல்வோம் ! நன்மை செய்வோம் ! என்ற லட்சியத்துடன் கடந்த 21 ஆண்டு காலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ் ‘மணிச்சுடர்’
சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்கள் தினத்தாள் முயற்சியை துவங்கியபோது அவர் முன் இருந்த கனவுகள் மணிச்சுடரின் தொடர் வரவால் இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ச் சமுதாயத்திடம் உண்மை நடப்புகள் உடனுக்குடன் சென்றடைய வேண்டுமென்ற உயரிய நோக்கம் ‘மணிச்சுடர்’ மூலம் நிறைவேறி வருகிறது.
அதில் இடம் பெறும் செய்திகள் அன்றாடம் முஸ்லிம் லீக் இணைய தளத்தில் வெளியிடப்படுகின்றன.
எத்தனையோ இதழ்கள் வெளிவரும் இக்காலக் கட்டத்தில் எதிலும் வெளிவராத பல செய்திகள் மணிச்சுடரில் மட்டுமே இடம் பெறுகிறது இதன் தனிச் சிறப்பு.
நல்ல செய்திகளை நாள்தோறும் தரும் ‘மணிச்சுடர்’ சமுதாயத்தின் மனசாட்சியாக மலர்கிறது. இதற்கு ஒத்துழைப்பும் உதவியும் பெருகுகிறது என்பதை காட்டும் வகையில் அனைவரின் ஆதரவும் தேவை.
ஒவ்வொரு ஆண்டும் ‘மணிச்சுடர்’ ரமளான் சிறப்பு மலர் வெளியிடப்பட்டு அது அனைவராலும் ஆவணமாக பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ரமளான் சிறப்பு மலர் இதுவரை வெளியான மலர்களில் முத்திரை பதிக்கும் மலராக முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளையால் வெளியிடப்படவுள்ளது.
இம்மலருக்கு சமுதாய பெருந்தகைகளின் ஊக்கமும், சிந்தனை யாளர்களின் ஆக்கமும் தேவை என்பதோடு வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் அவசியத் தேவை.
மலர் முன்கூட்டியே வெளிவர அவை உரிய காலத்தில் கிடைக்கப் பெற வேண்டும். இதற்கு உங்களின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நாடுகிறேன்.
நன்றி
தங்கள் அன்புள்ள
பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன்
ஆசிரியர் – ’மணிச்சுடர்’ நாளிதழ்

இம்மலரில் தங்களது ஆக்கங்களும் இடம் பெற விரும்பினால் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை
காயிதே மில்லத் மன்ஸில்
36 மரைக்காயர் லெப்பை தெரு
சென்னை 600 001
போன் : 044 2521 8786 / 25217890 / 2524 7863
ஃபேக்ஸ் : 044 – 2521 7786
செல் : 944 3839 401 / 996 281 5495 / 98 407 52313
மின்னஞ்சல் : info@muslimleaguetn.com
www.muslimleaguetn.com


விளம்பரக் கட்டணங்களை அமீரகத்தில் செலுத்த விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
முதுவை ஹிதாயத் :
050 51 96 433
muduvaihidayath@gmail.com
லால்பேட்டை அப்துல் ரஹ்மான், அபுதாபி
050 282 1852

Tuesday, August 3, 2010

காயிதே மில்லத்தின் கல்விச் சிந்தனைகள் !

காயிதே மில்லத்தின் கல்விச் சிந்தனைகள் !

http://www.mudukulathur.com/educationdetails.asp?id=330

அரசு பள்ளிக்கூடங்களில் மத கல்வி போதிக்கப்பட வேண்டும் !
சிறுபான்மையினர் தாய்மொழிகளில் ஆரம்ப கல்வி தேவை !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தனது கல்லூரி படிப்பை தியாகம் செய்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த்தே ! இந்திய முஸ்லிம்கள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறையுடன் அவர் அரும்பாடு பட்டார். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் அரசியல் நிர்ணய சபைக் குழு சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினராகவும் அவர் பணியாற்றிய காலங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக’ த்திற்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்ட போதெல்லாம் அதன் உரிமைக்காக அவர் துணிந்து குரல் கொடுத்துள்ளார். காயிதே மில்லத்தின் அயராத உழைப்பின் காரணமாகவே, கேரளா மாநிலத்திலும் தமிழகத்திலும் முஸ்லிம்கள் கல்வித் துறையில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். கேரளாவின் முஸ்லிம் லீக் தலைவர், சி.ஹெச். முகம்மது கோயா, அம்மாநில கல்வி அமைச்சராகவும் மாநில முதலமைச்சராகவும் பதவி வகிக்க முடிந்ததென்றால், அதற்குக் காரணம் காயிதே மில்லத் அவர்களின் கல்விச் சிந்தனையும் சேவையுமே ஆகும்.
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்த போது 06.03.1947, 30.10.1947, 26.04.1948, 14.03.1949, 05.08.1950, 28.03.1951, ஆகிய தேதிகளில் அவர் உரையாற்றும்போது இந்திய முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் குறித்து தெளிவாக பேசியதுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
அரசியல் நிர்ணய சபையில் …
08.11.1948, 7.12.1948 ஆகிய தினங்களில், அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் அவர்கள் உரையாற்றும்போது கல்வி நிலையங்களில் மதக் கல்வி போதிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய ஆன்மீகக் கல்வி வழங்குவதன் மூலமே எதிர் காலத்தில் சிறந்த குடிமக்களாக மாணவர்களை உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.
ராஜ்ய சபாவில் 11.09.1956 அன்று உரையாற்றும்போது உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு உருது மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். 03.09.1965, 06.09.1965 ஆகிய தேதிகளில் உரையாற்றும்போது அலிகர் முஸ்லிம் கலாச்சாலை பிரச்சினை குறித்து விரிவாக பேசி பதிவு செய்துள்ளார்.
சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் மட்டுமல்லாது பொது மேடைகளிலும் முஸ்லிம் சமுதாயம் கல்வித் துறையில் முன்னேற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அதற்காக அவர் பாடுபட்டதன் காரணமாகவே தமிழகத்தில் முஸ்லிம் மக்களால் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1919 –ல் இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி என்ற ஒரே ஒரு கல்லூரி மட்டுமே முஸ்லிம் களால் நடத்தப்பட்டு வந்தது. சென்னையில் சுதந்திரத்திற்கு முன் முஹம்மதன் கலைக்கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த கல்லூரியை அரசு கலைக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்ததுடன் அக்கல்லூரியில் முஸ்லிம்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளையும் அரசாங்கம் தடை செய்ததனால் அன்றைய கல்வியமைச்சர் அவிநாசி லிங்கத்தின் ஆலோசனையின் பேரில் முஸ்லிம்களுக்கென்று தனியாக கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக ஊர் ஊராகச் சென்று முஸ்லிம் செல்வந்தர்களை அணுகி உழைத்ததன் மூலமாகவே, இன்று ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில –
முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக்கூடங்கள்.
புதுக் கல்லூரி, சென்னை
ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
ஜாஹிர் ஹூசைன் கல்லூரி, இளையான்குடி
ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்
ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை
காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை
முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு
மழ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்
எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை
தாசிம் பீவி பெண்கள் கலைக்கல்லூரி, கீழக்கரை
வாவு வஜிகா வனிதையர் கல்லூரி, காயல்பட்டணம்
அன்னை ஹாஜரா மகளிர் கல்லூரி, மேலப்பாளையம்
எம்.ஐ.டி. மகளிர் கல்லூரி, திருச்சி
ராஜகிரி தாவூத் பாட்சா கல்லூரி, தஞ்சாவூர்
ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை
கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர்
(தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது).
சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை
டானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி, சென்னை உட்பட
ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மகளிர் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப்பட்ட கல்லூரிகளையும், மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகின்றார்கள். இக்கல்லூரிகளில் அதிகம் பயின்று பயன்பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றன.
கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் மருத்துவ கல்லூரியைத் துவக்கி நடத்துவதற்கான முயற்சிகளும் ஆரம்பமாகியுள்ளன. கடந்த 2010, மே 25 ஆம் தேதி முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற முஸ்லிம் கல்வியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கெல்லாம் காரணம் காயிதே மில்லத் என்பதை எவரும் மறுக்க முடியாது !


நன்றி :
பள்ளபட்டியில் ஜுன் 9 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு 2010 ல் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இருந்து….

தொகுத்தவர் : மணிச்சுடர் இ.ரா.ச.மு. ஹமீது ( 99410 86586 )


sadayan sabu
dateWed, Aug 4, 2010 at 11:03 AM


அஸ்ஸலாமு அலைக்கும்

சிறுபான்மை கல்வி நிலையங்களாக கடந்த 1998 ல் இருந்து நம் சமுதாயத்திற்கும். மாற்று மத சமுதாயத்தினருக்கும் கல்விச்சேவை செய்து வரும் இரு கல்லூரிகளை மணிச்சுடர் இ.ரா.ச.மு. ஹமீது மறந்து விட்டார் போல் தெரிகிறது.

சுல்தானா அப்துலலாஹ் ராவுத்தர் மகளிர் கல்லூரி - கூத்தாநலலூர்

ராபியம்மாள் அஹமது மைதீன் மகளிர் கல்லூரி - திருவாரூர்

இரு கல்வி நிறுவனங்களும் கூத்தாநல்லூர்காரர்களால் நடத்தப் படுகிறது

ஆகஸ்ட் 1-ல் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் அனைத்து மாநில தலைவர்கள் சென்னை வருகை மிகச் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள்

ஆகஸ்ட் 1-ல் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் அனைத்து மாநில தலைவர்கள் சென்னை வருகை மிகச் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழுக் கூட்டம் சென் னையில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடை பெறுகிறது.
இக்கூட்டத்தில் பங் கேற்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள், அனைத்து மாநில தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பனர்கள் சென்னை வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு ஏற் பாடுகளை இந்திய ய+னி யன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில தலைமை யகம் செய்ள்ளது.
தேசிய செயற்குழு
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை எழும்ப+ரிலுள்ள ஃபைஜ் மஹாலில் நடைபெறு கிறது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய ரயில்வே இணை அமைச் சருமான இ.அஹமது தலைமையில் நடை பெறும் இக்கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விளக்க உரை யாற்றுகிறார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நடவடிக் கைகளை தேசிய அளவில் ஒரே மாதிரியாக நடை முறைப்படுத்த சட்டத் திருத்தங்கள் செய்வது பற்றி இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
இளைஞர் அணி மாநாடு
அரசியல் விழிப்புணர் வுடன் இளைஞர்களை ஒருமுகப்படுத்தவும், தீவிரவாதத்தின் வலையில் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் வீழ்ந்து விடா மல் பொதுநலப் பணியாற் றவும் உரிய வழிகாட்டு தலைச் செய்ய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணி மாநாட்டை தேசிய அள வில் நடத்துவது பற்றி இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட உள்ளன.
நிர்வாகிகள் வருகை
தேசிய செயற்குழுவில் பங்கேற்பதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர் இ.அஹமது நேற்று (ஜூலை30) மாலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் வருகை தந்தார்.
தேசிய பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா, தேசிய செயலாளர்கள் டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர் ஆகியோரும் சென்னை வந்துள்ளனர்.
அனைத்து மாநிலங்களி லிருந்தும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் செய லாளர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களின் விவரம் வருமாறு:
கர்நாடக மாநிலத்திலி ருந்து எம்.எஸ். இனாம் தார், மஹாராஷ்ரா மாநிலத் திலிருந்து சமீம் சாதிக், மேற்கு வங்காளத்திலிருந்து சலீம் மக்கர், ஆந்திர மாநி லத்திலிருந்து காலித் ஜிபைரி, ஆஸம் மொய்னு தீன், உத்திரபிர தேசத்தி லிருந்து கவுசர் ஹயாத் கான், முக்தர் ராணா, ஜார்கண்ட் மாநிலத்திலி ருந்து அம்ஜத் அலி, உத்தி ரகாண்ட்டிலிருந்து காஃலிப் ஹசன், அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து முஹம்மது திலீர் கான், கேரளத்திலிருந்து ஹாமித் அலி சாம்நாட், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அம்ஜத் அலி, அட்வகேட் எம்.கே. ஹபீப் ஆகியோர் சென்னை வருகை தந்துள்ளனர், இன்னும் பல்வேறு மாநி லத்திலிருந்து வருகை தர உள்ளனர். கேரள மாநில நிர்வாகிகள் அனைவரும் ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகை தருகின்றனர்.
வரவேற்பு ஏற்பாடுகள்
செயற்குழுவிற்கு வருகை தரும் தேசிய நிர்வாகி களையும், அனைத்து மாநில தலைவர்களையும் வரவேற்று உபசரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வழிகாட்டுதலில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் இப்பணிகளை ஒருங் கிணைத்து வருகிறார்.
மாநில நிர்வாகிகள் அணிகளின் அமைப்பா ளர்கள் ஒத்துழைப்புடன் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மீனம் பாக்கம் விமான நிலை யத்தில் இருந்தும், சென்னை சென்ட்ரல், எழும்ப+ர் ரயில் நிலைய பகுதிகளிலிருந்தும், அண்ணாசாலை உள் ளிட்ட முக்கிய இடங்களி லிருந்தும் பச்சிளம் பிறைக் கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வரவேற்பு பதாகைகளும் வைக்கப்படுகின்றன.
இப்பணிகளில் வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அமைப்புகள் ஈடுபட் டுள்ளன.
முஸ்லிம் மாணவர் பேரவை
வரவேற்பு பணிகளை முஸ்லிம் மாணவர் பேரவையை சேர்ந்த டி.கே. ஷா நவாஷ், வி.ஏ. செய்யது பட்டாணி , வி. ஏ. செய்யது அபுதாஹிர், அப்துல் ரஹிம், இஸ்ஸத் மக்கி, அபுல் காசிம், எம்.அன்வர் உசேன், முஹம்மது உஸ்மான், ஏ.கே. முஹம் மது ரபி, அப்துல் ஹக், இம்ரான் கான், எம்.எஸ். காதர் உள்ளிட்டோர் சிறப்புற செய்து வருகின் றனர்.

Monday, August 2, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

கல்வி, வேலைவாய்ப் பில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்க ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் தக்கத் திருத் தங்களுடன் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் முஸ்லிம் களுக்கு உரிய பிரதிநிதித்து வம் கிடைக்க தக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு வேண்டு கோள் விடுத்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள பைஸ் மஹாலில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தேசிய பொது செயலாளர் பேராசி ரியர் கேஎம். காதர் மொகி தீன், தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசியச் செயலா ளர்கள் குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், பொதுச் செயலாளர் பி.கே. குஞ் ஞாலிக்குட்டி உள்ளிட்ட அனைத்து மாநில தலைவர், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப் பினர்கள் பங்கேற்றனர்.


இக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு-


சமூக ஒற்றுமை காப்போம்


1. இந்தியாவின் மதச்சார் பற்ற ஜனநாயக கட்ட மைப்பு சமுதாய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்க திட்டமிடும் தீய சக்திகளின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம் என்று அனைத்து இந்தியர்களை யும், குறிப்பாக இந்திய முஸ்லிம்களையும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கேட்டுக் கொள்கிறது.


பல்வேறு நம்பிக்கை களை கடைப்பிடிக்கும் மக்கள் சமாதான சகவாழ் வுடன் வாழ்ந்து கொண்டி ருப்பதை மதத்தின் பெய ரால் பல்வேறு வன்முறை களின் மூலமாகவும், அபா யகரமான கொள்கைகள் மூலமும் வெறுப்பையும், துவே ஷத்தையும் ஏற்ப டுத்த பயங்கரவாத அமைப் புகளின் எடுபிடிகளாக செயல்படுபவர்களின் பயங்கர முயற்சிகளுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது.


சிறுபான்மையினர் மற்றும் நம் சமூகத்தின் நலிந்த பிரிவினர் எதிர் கொள்ளும் பிரச்சினை களை ஜனநாயக வழியில் தீர்வு மேற்கொள்ள வேண் டும் என்பதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியாக நம்பிக்கை கொண்டிருக்கிறது. உள் நோக்கத்துடன் செயல் பட்டு கொடுமையான குற் றங்கள் மற்றும் வன்முறை யில்


சமுதாயத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்


2. 1948-ம் ஆண்டு இந்திய முஸ்லிம் சமுதாயத் தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஸ்தாபனத் தலைவர் காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் மற்றும் இஸ்லாமிய அறி ஞர்களும் வழிகாட்டியபடி மதச்சார்பற்ற ஜனநாயக நோக்கங்களுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பணியாற்ற நம்பிக்கையுடன் உறுதி கொண்டுள்ளது.


கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும், அனுதாபி யும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களும், முஸ்லிம் சமுதாயத்திற்கு களங் கத்தை ஏற்படுத்தும் வகை யில் நடந்து கொள்ளும் விஷமத்தனம் மற்றும் அபாயகரமான தூண்டு தலுக்கு பலியாகி விடாமல் விழிப்புடன் இருக்குமாறு சமூகத்துக்கு பிரச்சாரம் செய்யவும் சமுதாய ஒற் றுமை மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு உழைக்க இந்த செயற்குழு வேண்டு கோள் விடுக்கிறது.


சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்கு கண்டனம்


3. சிறுபான்மையினர் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது பாசிச சக்திகள் கட்ட விழ்த்து விட்ட வன்முறை மற்றும் பயங்கரவாத தாக் குதல்களுக்கு இந்த கூட்டம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது.


குஜராத் போன்ற மாநி லங்களில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் கொடுமை களினால் சிறுபான்மை யினர் துன்பங்களையும், துயரங்களையும் அனுப விக்க வேண்டிய திருப்பதை தொடர்ந்து நாங்கள் வன் மையாக கண்டிக்கிறோம்.


சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச சக்திகள் நடத்தும் குற்றங்களுக்கு எதிராக பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்தியப் புலனாய்வுத் துறை அமைப்புகளுக்கு பாராட்டுதலையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுபான் மையினருக்கு எதிராக பாசிச சக்திகள் நடத்தும் வன் முறைகளை தடுக்க அரசு அனைத்து நடவ டிக்கை களையும் உறுதி யுடன் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


தமிழக அரசுக்கு பாராட்டு
4. சிறுபான்மையின சமுதாயத்தின் நன்மைக் காக மத்திய அரசு கொங்ணடு வந்துள் சமூக நலத் திட்டங்களை வலு வாக அமல்படுத்தும்படி மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த இந்த கூட்டம் கேட்டுக்கொள் கிறது.


சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்ட சமுதா யத்தின் சமூக மற்றும் கல்வி நிலையில் உள்ள இடர்ப் பாடுகளை போக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயற்குழு பாராட்டுகிறது.


கேரள அரசின் அலட்சியம்


5. சிறுபான்மையினருக் காக மத்திய அரசின் நலத் திட்டங்கள் கேரள மாநி லத்தில் இன்று நடை முறைப் படுத்தவில்லை என்று சுட்டிக் காட்டுவ தோடு . கேரள மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய சமூகத் தினருக்கான நலத் திட்டங் களை நடை முறைப் படுத் துவதில் கேரள அரசு தவறி விட் டது என்பதையும் இக் கூட்டம் வலியுறுத்தி கூறு கிறது.


மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களின் பரிதாப நிலை


6. மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினரின் பரிதாபகரமான நிலையை கருத்தில் கொண்டு அந்த மாநில அரசு சிறுபான் மையினரின் முன்னேற்றத் திற்கான நீதியரசர் ராஜேந் தர் சச்சார் கமிட்டி பரிந் துரைகளை உறுதியுடன் நடைமுறைப் படுத்த அந்த மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண் டும் என இச் செயற் குழு கேட்டுக் கொள்கிறது.


தேசத்திற்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம்


7. இஸ்லாத்தின் அடிப் படை கொள்கைகளின் அசைக்க முடியாத நம் பிக்கையுடனும், சகிப்புத் தன்மை, அமைதி, மதநல்லி ணக்கம், ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் ஆகிய வற்றை மனதில் கொண்டும் இந்தியாவில் மற்ற சமூகங் களுடன் ஒருங்கிணைந்து செய லாற்றவும், மதச் சார்பற்ற இந்திய ஜனநாய கத்தின் உறுதியை காப் பாற்ற உழைக்கவும் இந்திய முஸ்லிம்களை இச் செயற் குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஒத்துழைப்பு


8. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக தொடர்வதில் பெருமை கொள்ளும் இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையை தயக்கமின்றி ஆதரிப்பதையும், பாசிச சங்பரிவார் அமைப்புகள் மற்றும் காலாவதியான கொள்கைகளை கொண்ட கம்யூனிஸ்டுகள் ஆகியவற் றுக்கு எதிராக மத்திய அரசு போராடுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தனது ஆதரவை நல்கும் என இச் செயற்குழு உறுதி ஏற் கிறது.


பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் சமூக நீதி மற் றும் கவுரவ மான வாழ்க்கையை முஸ்லிம்கள் அடைய தொடர்ந்து போராட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வற்புறுத்துகிறது.


வறுமை ஒழிப்புத் திட்டத்தை முன்னிலைப்படுத்துங்கள்


9. உறுதியான பொரு ளாதார பாதையில் தேசம் முன்னேற ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு எடுத்து வரும் போற்றத் தக்க நடவடிக்கைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டுகிறது.


அதேநேரத்தில் வளர்ச்சியின் பலன்கள் மிகவும் ஏழையாக உள்ள வர்களுக்கு போய்சேர வேண்டும். 30 சதவீதத் திற்கு அதிகமான மக்கள் இன்னமும் வறுமைக் கோட்டிற்கு கீழே துன்பப் பட்டுக் கொண்டிருக்கி றார்கள். மேலும், கிராமப் புறங்களில் வேலையில் லாத் திண்டாட்டம் அதிக மாக உள்ளது.


வறுமை ஒழிப்புத் திட்டங்களிலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்களிலும் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், பன் முகவேளாண்மை, தொழில் மற்றும் வர்த்தகத் திட்டம் போன்றவை முனைப்புடன் செயல் படுத்தப்பட வேண் டும் என்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துகிறது.


விலைவாசியை குறைக்க நடவடிக்கை


10. ஏழைகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட வருமானம் கொண்டவர்க ளுக்கும் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும் அத்தி யாவசியப் பொருட்களின் விலை உயர்வுகள் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கவலை கொள்கிறது.


போதிய பயனை கொடுக்கும் வகையில் பொது விநியோகத் திட் டம் நிறைவேற்றப்பட வேண்டும். சட்டப்பூர்வ மான உணவு தானிய விநி யோகம் பலப்படுத்த வேண் டும். அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஒழுங்கு படுத்தும் வகையில் சந்தையை அரசுகள் கட் டுப்படுத்தவது அவசியம் என்பதை இச் செயற்குழு சு.ட்டிக் காட்டுகிறது.


ராஜேந்திர சச்சார் கமிஷன் பரிந்துரைகள்


11. நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந் துரைகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பாராட்டுகிறது.


முஸ்லிம் மாணவர் களுக்கு பொருளாதார உதவிகள், 15 அம்சத் திட்ட நிறைவேற்றம், சிறு பான்மை கல்வி நிறுவனங் களுக்கு நன்மைகள் ஆகி யவை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாகும்.


ஆனால், இன்னும் நிறைய செய்ய வேண்டி யுள்ளன. சமூக நல்லிணக் கம், மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதியை எவ்வளவு விலை கொடுத் தும் நிலை நிறுத்த வேண் டும். சிறுபான்மை சமூகத் தினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்கும் படி மத்திய அரசு வழி காட்ட வேண் டும்.


ஏற்க னவே உறுதிய ளித்த சமூக வாய்ப்புகள் ஆணையம் இன்னமும் அமைக்கப்படவில்லை. மத்திய அரசின் சிறு பான்மை நலத்துறை சிறப் பாக தனது கடமைகளை நிறைவேற்றும் வகையில் போதிய அதிகாரம் வழங் கப்பட மத்திய அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்து கிறது.


வஃக்பு வாரிய நிர் வாகம், ஹஜ் பயண நிர் வாகம் ஆகியவற்றை முறைப்படுத்த தேவை யான நடவடிக்கைகளை எடுக் கும்படி அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இச் செயற்குழு வேண்டு கோள் விடுக்கிறது.


குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி


12. கல்வி உறுதிச் சட்டத்தின் கீழ் குழந்தை களுக்கு இலவச கல்விக் கான உரிமையை அமல் படுத்த போதிய நடவடிக் கைகள் எடுக்கப்படுவதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது.


முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் புதிய பள்ளிக்கூடங்களை திறக்க போதிய திட்டங்கள் தீட் டப்படவேண்டும். முஸ்லிம் இளைஞர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் உயர்த்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பு சட் டம் வழங்கியுள்ள சிறு பான்மையினர்களுக் கான கல்வி உரிமைகளை உள் நோக்கத்தோடு தவறாக வழிகாட்டப்பட்ட சிலர் தடுக்க முயல்வதை எப்பாடு பட்டாவது தடுக்க வேண் டும் என இச் செயற்குழு வலியுறுத்துகிறது.


நாடாளுமன்ற - சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம்


13. பாராளுமன்றத்திலும் , மாநில சட்டமன்றங்களி லும் முஸ்லிம்களுக்கு உள்ள குறைந்த பிரதிநிதித் துவம் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கவலை தெரிவிக்கிறது.


தேசத்திலுள்ள மொத்த முஸ்லிம் மக்கள் தொகை 13 சதவீதமாக இருக்கின்ற போது மக்களவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித் துவம் 5.5 சதவீதமாகவே உள்ளது. அதேபோன்று மாநில சட்டப் பேரவை களிலும் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறiவாக உள்ளது. நமது ஜனநாயக ஆட்சி முறை ஆரோக்கியமாக செயல்பட நாடாளுமன்றத் திலும், மாநில சட்டமன் றங்களிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு போதிய பிரதிநிதித் துவம் கிடைக்க தக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயற்குழு வலியு றுத்துகிறது.


ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள்


14. கல்வி நிலையங்கள் மற்றும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைக்க வழி செய்யும் வகையில் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் தக்க திருத்தங்களுடன் மிக விரைவாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இச்செயற்குழு வலி யுறுத்தி கேட்டுக் கொள் கிறது.


மேற்கண்டவாறு தீர் மாங்கள் நிறைவேற்றப்பட் டன.


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நன்றி கூறினார்.

Sunday, August 1, 2010

பயங்கரவாதத்தில் முஸ்லிம்கள் தடுப்பதற்கு சிறப்பு மாநாடு

பயங்கரவாதத்தில் முஸ்லிம்கள் தடுப்பதற்கு சிறப்பு மாநாடு


http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=603&cat=32