Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Thursday, August 26, 2010

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி


http://muslimleaguetn.com

http://mudukulathur.com



தமிழக அரசு இயற்றியுள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்பாடத வகையில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணை விரை வில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு வட்டாரத்தின் இந்த தகவலானது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு முதல்வர் கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசின் மற்றொரு ரமளான் பரிசாக அமைந்துள்ளதாக முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சி தெரிவித் துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

நாடு முழுவதும் நடை பெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாய பதிவு செய்யப்பட வேண் டும் என்ற உச்ச நீதிமன்றத் தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாய பதிவு சட்டத்தை கொண்டு வந்தது.

இதற்கான சட்ட முன் வடிவு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டு 2009 ஜூலை 29ம் தேதி விவாதத்திற்கு வந்தது. சட்ட முன்வடிவில் தெரி விக்கப்பட்டிருந்த விவரங் கள் முஸ்லிம்களின் தனி யார் சட்டத்திற்கு மாற்ற மாக அமைந்திருந்ததுடன் ஷரீஅத் சட்டத்திற்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்ப தாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கருத்து தெரி வித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சிகள்

அதன் அடிப்படையில், இந்த சட்ட முன்வடிவு அறி முகப்படுத்தப்பட்டபோதே இந்திய யூனிய‌ன் முஸ்லிம் லீக் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
மேலும், இது தொடர் பாக ஆலோசனைக் கூட் டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஏற்பாட் டில் 2009 ஜூலை 7ம் தேதி தமிழ்சாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தலை மையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னி லையில் முஸ்லிம் சமுதா யத்தின் அனைத்து அமைப் புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகை யில் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் தமிழக அரசின் இந்த சட்டம் குறித்து மறு பரிசீலனை செய்ய அரசை கேட்டு தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக சட்ட மன்றத்தில் 2009 ஜூலை 21ம் தேதி சட்டமுன்வடிவு குறித்த விவாதத்தில் பங் கேற்று பேசிய அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப் பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி ஹெச். அப்துல் பாசித் ஆகி யோர் வெட்டுத் தீர்மானங் களை முன்மொழிந்தனர்.

தமிழக சடட அமைச்சர் துரை முருகன் இந்த சட் டத்தின் மூலமாக முஸ்லிம் களுக்கு எத்தகைய பாதிப் பும் ஏற்படாது என்று உறு தியளித்ததுடன் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்ய இரண்டு வருட காலம் அவகாசம் அளிக் கப்படும் என்றும் உறுதிய ளித்திருந்தார். இதனடிப் படையில் வெட்டுத் தீர்மா னங்கள் திரும்பப் பெறப் பட்டன.
இந்த சட்டம் தொடர் பாக முஸ்லிம் சமுதாயத் தில் குறிப்பாக மார்க்க அறிஞர்கள் மத்தியில் ஏற் பட்டுள்ள சந்தேகங்களை போக்கும் வகையில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தீர்மானங்கள் வாயிலாகவும் அரசுக்கு தெரிவித்து வந்தது.

முதல்வர் கலைஞர் அறிவிப்பு

கடந்த 2010 பிப்ரவரி 3ம் தேதி பேரறிஞர் அண்ணா வின் நினைவு தினத்தை யொட்டி செய்தியாளர் களுக்கு முதல்வர் கலைஞர் பேட்டியளித்தார்.

அப்போது, தமிழக அரசின் திருமண பதிவு சட்டம் குறித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு எழுந் துள்ள சந்தேகங்களை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி யினை மணிச்சுடர் நிருபர் ஹமீது முதல்வர் கலைஞரி டம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் கலைஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதாக வும் இந்த சட்டத்தால் சிறுபான்மை முஸ்லிம் களுக்கு பாதிப்பு இருக் கிறதா என்பது குறித்து சிறுபான்மை சமுதாய அமைப்புகளின் தலைவர் களுடன் கலந்து ஆலோ சனை நடத்த உள்ளேன் என்று அறிவித்தார்.

அதன்படி, சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் சிறுபான்மை சமூக அமைப்புகளின் தலைவர் களை அழைத்து இச்சட் டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்-பிரதிநிதிகள் பலமுறை கூடி இச்சட்டத் தில் செய்யவேண்டிய திருத் தங்கள் குறித்து முன்வரைவு ஒன்றினை தயார் செய்து அரசு துறைக்கு அனுப்பினர்.

மேலும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.கலீலுர்ரஹ்மான், ஹெச். அப்துல் பாசித் ஆகியோர் சட்டத்துறை அமைச்சருடனும் பதிவுத் துறை அதிகாரிகளுடனும் இச்சட்ட திருத்தம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதன்விளைவாக தமி ழக அரசின் திருமண கட் டாய பதிவு சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளதாகவும், அதற் கான அரசாணை இன்னும் ஓரிருநாளில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
மற்றொரு ரமளான் பரிசு

முதல்வர் கலைஞர் தலைமையில் 5வது முறையாக தி.மு.க. அரசு ஆட்சி யமைத்ததும் முஸ்லிம் களின் நீண்ட நாள் கோரிக் கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் 2007ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் முதல்வர் கலைஞர் அறிவித்தார். அப்போது அது ரமளான் மாதமாக இருந்ததால் முதல்வர் கலைஞர் முஸ்லிம் சமுதாயத்திற்கு அளித்த ரமளான் பரிசாக அதனை முஸ்லிம்கள் ஏற்று போற்றி மகிழ்ந்தனர்.

தற்போது, சிறு பான்மை முஸ்லிம் சமுதா யத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகை யில் தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் உரிய திருத் தங்கள் செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்படக் கூடிய நிலையும் இந்த ரமளான் மாதத்தில் உருவாகியுள்ள தால் முதல்வர் கலைஞரின் மற்றொரு ரமளான் பரிசாக முஸ்லிம்கள் இதனை கருதுகின்றனர்

முஸ்லிம் லீக் தொடர் முயற்சிக்கு வெற்றி

தமிழக அரசின் திருமண கட்டாய சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்திய உடனேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது

முஸ்லிம் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறை வேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.

தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை சந்தித்து முறையிட்டது.

தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த தாய்ச்சபை தொய்வின்றி தனது கடமையைச் செய்தது. தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணை முதல்வரை கடந்த 23-ம் தேதி சந்தித்து இதுபற்றி வலியுறுத்தினார்.

காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., கடந்த இரண்டு மூன்று தினங் களாக தமிழக உள்துறை செயலாளர் ஞானதேசிகன், சட்டத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.
இவைகளின் பலனாக தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப் பிக்கப்படுகிறது.

ஆரவாரம் - ஆர்ப்பாட்டமற்ற அமைதி வழியில் காரியம் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Friday, January 22, 2010

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வாய்ப்பு


தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பதிவுசெய்வதற்கும், ஏற்கனவே உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.). அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனது அடையாள அட்டையுடன் வர உள்ளார்.

வாக்காளர்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் புகைப்படத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் ஆகியவற்றை குறிப்பெடுப்பார்.

01-01-2009 அன்று 18 வயது நிரம்பியவர்கள் படிவம் 'பி'-யில் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி கொண்டு வரும் படிவத்தில் கையொப்பமிட்டுக் கொடுக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வயது மற்றும் இருப்பிடச் சான்றிதழை அவரிடம் அளிக்க வேண்டும்.

அந்த அலுவலர் வீடுகளுக்கு வருகை தந்ததற்கு அடையாளமாக அந்த வீட்டின் முகப்புக் கதவில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

சம்பந்தப்பட்ட அதிகாரி 22-1-2010க்குள் வராமல் இருப்பின் அது பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர், சென்னை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் தெரிவிக்கலாம்.

இதுபற்றிய முழு விவரமும் www.ceotamilnadu.nic.in - என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

(இது பற்றிய விவரத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி மாவட்ட அமைப்புகள் அனைத்தும் அச்சிட்டு வீடுகளில் விநியோகிக்கவும், பள்ளிவாசல்களில் அறிவிக்கச் செய்யவும் வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது).

செய்தி: தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Wednesday, January 6, 2010

மஹல்லா ஜமாஅத்களில் பதிவு செய்யப்படும் திருமண பதிவேடுகளை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும்

மஹல்லா ஜமாஅத்களில் பதிவு செய்யப்படும் திருமண பதிவேடுகளை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும்
செங்கோட்டை பொதுக் கூட்டத்தில் அப்துர் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள்


செங்கோட்டை, ஜன.6-

செங்கோட்டை நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் எழுச்சி பொதுக் கூட் டம் காயிதெ மில்லத் திடலில் ஒன்றிய செய லாளர் மு. அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற் றது.

மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செயலா ளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட கல்வி மேம்பாட்டுச் செயலாள எச். அப்துல் ரஹ்மான், நகரத் தலைவர் எம்.எம்.எஸ். ஹமீது, நகரச் செயலாளர் என். மஹப+ப், நகர துணைத் தலைவர் எல். நசீர் அஹமது, நகரப் பொருளாளர் எஸ். எம். அக்பர் பாதுஷா, மாவட்ட தொண்டர் அணி அமைப் பாளர் வி.ஏ. எஸ். செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலூர் பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ். கமருதீன் ஆலிம் அனைவ ரையும் வரவேற்றார்.

தென்காசி நகரப் பொருளாளர் கே.என்.எம். அப்துல் காதர், மாவட் துணைச் செயலாளர் வடகரை சுலைமான் சேட் ஆலிம், மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் ஆகியோரும் பேசினர்.

இறுதியாக வேலூர் முஸ்லிம் லீக் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசிய தாவது-

தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றாலும் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சுதந்திரமாக செயல்படு கிறார். தி.மு.க. கூட்டணி யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடரும்.

திருமணங்களை கட்டா யமாக பதிவு செய்ய வேண் டும் என்று சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள் ளன.

எனவே, சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் ஜமாஅத் தலைவர்கள், பள்ளிவாசல் முத்தவல்லி கள், சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள் ஆகியோரை அழைத்து தமிழக அரசு பேச வேண்டும். அதன் பிறகு இதனை செயல் படுத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

தற்போது மஹல்லா ஜமாஅத்வசம் உள்ள திரு மணப்பதிவு புத்தகங்களில் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பல விசாரணைக்கு பின்னர் தான் பதிவு புத்தகங்களில் திருமணங்கள் பதிவு செய் யப்படுவதால் இதனையே அங்கீகரிக்கப்பட்ட பதி வாக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்து முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் ஆகியோரிடம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்படும். இதற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பு கிறோம்.

இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசினார்.

கூட்டத்தில் கடையநல் லூர் நகரத் தலைவர் இ.ஏ. முஹம்மது காசிம், புளியங் குடி நகரச் செயலாளர் எம். அப்துல் ரஹீம், தென்காசி நகரச் செயலாளர் எ. அப்துல் காதர் நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராம், மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.ஏ. ஹைதர் அலி, தென் காசி எம். முஹம்மது உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் எம். முஹம்மது அலி, முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ் லுர் ரஹ்மான், புளியங்குடி எம். சாகுல் ஹமீது ஆகி யோர் கலந்து கொண்டனர்.

Abdul Rahman

Mohamed Ali
dateFri, Apr 10, 2009 at 10:22 AM
subjectRe: FLASH NEWS : வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு


Assalamu allaikum

Please convey my congrats to MR. Abdul Rahman on his candidature for Vellore constituency. I felt that the Indian Union Muslim League had atlast infused young and industrious young man for the Job. Good day


AP,Mohamed Ali


Kursheed Rafiudeen
dateFri, Apr 10, 2009 at 6:22 PM
subjectRE: FLASH NEWS : வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு

ASSALAMU ALAIKKUM

CONGRATULATIONS BROTHER ABDUL RAHMAN

DR RAFIUDEEN
PRESIDENT
WORLD TAMIL CULTURAL ASSOCIATION


Mohamed niyaz
dateFri, Apr 10, 2009 at 7:00 PM
subjectRE: FLASH NEWS : வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு


அண்னன அப்துல் ரஹ்மான் அவர்களின் சமுதாய தொண்டிற்க்கு கிடைத்த் அங்கீகாரம் இது. எல்லாம் அல்லாஹ் அப்துல் ரஹ்மான் அவர்களின் அரசியல் பணி தொடர நல் அருள்புரிவானாக (ஆமீன்). அண்னண் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்.
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

Mohamed niyaz

சமுதாய செம்மலுக்கு சிறந்த வரவேற்பு,
அவரின் சமுதாய சேவைக்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில்
அவரின் சமுதாய பணி தொடர நல்வாழ்த்துக்கள்
இறைவனுக்கு நீண்ட ஆயுளை வழங்கிட துஆச் செயவோம்.
அன்புடன்

முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

Friday, July 24, 2009

கட்டாய திருமண பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு: எம்.பி. கோரிக்கை

கட்டாய திருமண பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு: எம்.பி. கோரிக்கை

திருநெல்வேலி, ஜூலை 18: கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளித்து ஜமாஅத் பதிவு முறை தொடர தமிழக அரசு வழி செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

திருநெல்வேலியில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:

தமிழ்நாட்டில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், ஜனநாயக முற்போக்கு கூட்டணித் தலைவரான முதல்வர் கருணாநிதி கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்போம். ஐந்து தொகுதிகளிலும் எந்தக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், எங்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுவது போலவே எண்ணி அவர்களது வெற்றிக்கு தீவிரமாக தேர்தல் பணியாற்றுவோம்.

திருமண பதிவுச் சட்டம்: தமிழக அரசு அறிவித்துள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லீம்களுக்கு விலக்கு அளிக்க முதல்வரிடமும், துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

முஸ்லீம்கள் இதுவரையில் தங்களது திருமணங்களை அவர்கள் சார்ந்துள்ள ஜமாஅத்துகளில் பதிவு செய்து வருகின்றனர். அந்த பதிவு ஆவணங்கள் நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

இப்போது அரசு அறிவித்துள்ள கட்டாய பதிவு என்பது, ஜமாஅத் பதிவு முறையை குலைத்துவிடும் என அஞ்சுகிறோம். எனவே, ஜமாஅத் பதிவு முறை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். நடப்பு சட்டப் பேரவைக் கூட்டம் முடிவடைந்த உடன் இந்த பிரச்னைக்கு நல்லதொரு அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்.

சச்சார் கமிட்டி பரிந்துரைகளில் குறைந்தபட்ச பரிந்துரைகளை அமல்படுத்தக்கூட தற்போது அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி போதாது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கை, லிபரான் ஆணைய அறிக்கை ஆகியவற்றை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் நம்புகிறோம்.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டில் தற்போது 3080 பேருக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இது கடந்த 1991 ஆம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் ஆனது. இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.

எங்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 1-ல் குற்றாலத்தில் நடைபெற உள்ளது. அதில், கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு உழைத்தவர்கள் பாராட்டப்பட உள்ளனர் என்றார் அப்துர் ரஹ்மான்.

பேட்டியின்போது, மாநில பொதுச்செயலர் கே.ஏ.எம். அபுபக்கர், மாநில துணைத் தலைவர் கோதர்மைதீன், மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாநகர் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். மில்லத் இஸ்மாயில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Friday, August 22, 2008

கருத்து

கருத்து


Tamil Nadu State Indian Union Muslim League
dateMon, Aug 25, 2008 at 12:46 PM
subjectRe: http://quaidemillathforumuae.blogspot.com/

Dear Hidayath,
Visited the web site,nice updations,also you can add the office bearers list.
Regards,
Abu

abdul rahman
to"Ali, Liyakath" ,
skshameed@yahoo.com,
dateFri, Aug 29, 2008 at 8:29 PM
subjectRe: http://quaidemillathforumuae.blogspot.com/

Thambi Hidayath,
Excellent effort.
Very nice collection of photos and information.
You have put your good effort in maitaining the site so effective.
Please keep it up.
Thanks.

Abdul Rahman