உலமாக்கள்-பணியாளர் நல வாரியம் தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=46
தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் உலமாக்கள், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: உலமாக்கள் நல வாரியம்அமைக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் நீண்ட நாளைய கோரிக்கை. இந்த கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னிலைப்படுத்தி அது நிறைவேற்றப்படுவ தற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டது.
2008 ஜுன் 21ம் தேதி சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநில மாநாட்டில் முதல்வர் கலைஞர் முன்னிலையில் இக் கோரிக்கை தீர்மானம் முன்மொழியப்பட்டது.
கடந்த 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடத்திய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள்-உமராக்கள் மாநாட்டில் சமுதாயத்தின் முக்கியமான 16 கோரிக்கைகள் தீர்மானமாக முன்மொழியப்பட்டன. அதில் பிரதானமாக உலமாக்கள் நல வாரிய கோரிக்கை முன்மொழியப்பட்டது.
இம்மாநாட்டில் பங் கேற்று நிறைவுறையாற்றிய தமிழக ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்மானங்களைப் பற்றி குறிப்பிட்டு, ஹஹஇந்த அரசு சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்கின்ற அரசு|| இந்த தீர்மானங்களை பொறுத்த வரையில் உங்கள் உணர்வோடு நானும், உரிமை யுடன் முதல்வரிடம் முறையாக எடுத்துச் சென்று அதை நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய நேரத்தில், உரிய முறையில் நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டார்.
சொன்னதைச் செய்வோம்- செய்வதைத்தான் சொல்வோம்|| என்ற கலைஞரின் வாக்குறுதிக்கேற்ப இந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகனார் இன்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், மதரஸாக்களில் உள்ள உலமாக்கள், பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், வரும் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம், 10 ஆயிரம் சிறுபான்மையினருக்கு ரூ.30 கோடி கடனுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனி கவனம் செலுத்துவதற்காக சிறுபான்மைனருக்கான தனி இயக்குனரகம் சிறப்பாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்களுக்காக தமிழக அரசுக்கு குறிப்பாக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்பிக்கின்றோம்.
நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பேராசிரியர் அன்பழகனார் அவர்களுக்கும் சமுதாயத்தின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணை புரிந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழகத்தில் உள்ள சங்கைக்குரிய உலமா பெருமக்கள் முஸ்லிம் லீகின் முன்னனியினர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கின்றனர்.
வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது சமுதாய கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும்படி அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்களையும் பள்ளிவாசல் இமாம்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label உலமா. Show all posts
Showing posts with label உலமா. Show all posts
Wednesday, February 18, 2009
Friday, August 22, 2008
அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் செய்தவர்கள் உலமாக்கள்! -தளபதி ஷபீகுர் ரஹ்மான்
அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் செய்தவர்கள் உலமாக்கள்! -தளபதி ஷபீகுர் ரஹ்மான்
அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் பல செய்தவர்கள் உலமா பெருமக்கள். அந்த தியாகங்கள் நன்றியுடன் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் மௌலவி தளபதி ஷபீகுர் ரஹ்மான் கூறினார்.
பரங்கிப்பேட்டை நகரில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மவ்லானா எம்.எஸ்.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி தலைமை வகித்தார்.
மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைச் செயலாளர் மவ்லானா அப்துஸ் ஸமத்ரஸாதி திருக்குர்ஆன் வசனம் ஓதினார். மவ்லானா ஏ.மஃசூக் ரஹ்மான் தாவ+தி தேசிய கீதம் பாடினார். மவ்லானா முஹம்மது ஃபாரூக் பாகவி வரவேற்றுப் பேசினார். மவ்லானா முஹம்மது ஷேக் ஆதம் மலாஹிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.ய+னுஸ், பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா மத்ரஸா ஆசிரியர் மவ்லானா சீத்தீக் அலி பாகவி, பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் முதல்வர் எம்.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் மாநில மார்க்க அணிச் செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
நம் இந்திய திருநாட்டின் 61ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் அனைத்து மக்களாலும் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களாலும் உலகெங்கும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
பரங்கிப்பேட்டையில் ஜமாஅத்துல் உலமா சபையினரால் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்துவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகும்.
நம் இந்திய திருநாட்டில் 200 ஆண்டுகாலம் ஆதிக்கம் செலுத்தி நம்மை அடிமைபடுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து வெள்ளையர்கள் நம் தாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், வெளியேற்றப்பட வேண்டும் என்று நம் நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தினரும் ஹிந்து சமுதாயத்தினரும் கிறிஸ்துவ-சீக்கிய சமுதாயத்தினரும் ஒன்றுபட்டு போராடிப் பெற்ற சுதந்திரத்தை விழாவாக இன்று கொண்டாடி வருகிறோம்.
வெள்ளையர்களைப் போன்று இந்தியர்களுக்கும் சலுகைகள் வேண்டுமென்று நம் நாட்டு தலைவர்கள் கேட்ட போது, சலுகைகள் மட்டுமல்ல@ வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டே வெளியேற வேண்டும். வெளியேற்றபட வேண்மென்று முழங்கியவர்கள் நம் நாட்டு தலைவர்கள்.
வெள்ளையர்களை வெளியேற்றப்பட வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்கியதற்காக நம் நாட்டு உலமாக்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள்... செத்து மடிந்தார்கள். சிறையில் அடைத்து கொடுமைபடுத்தப் பட்டார்கள். அத்தனை கொடுமைகளையும் சகித்து வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறும் வரை போராடியவர்கள் நம் உலமாக்கள்.
உ.பி.யிலுள்ள தேவ்பந்த் தாருல் உலூம் இஸ்லாமிய மார்க்க பல்கலைகழகத்தின் நிறுவனர் மவ்லானா காஸிம் நானூத்தவி அவர்களையும் அறிவுலக மேதை, ஆன்மீகத்தென்றல் மவ்லானா ஹீஸைன் அஹ்மத் மதனீ, மவ்லானா இப்ராஹிம் கங்கோஹி, மவ்லானா ரஷீத் அஹ்மத் தஹ்லவி, மவ்லானா இம்தாதுல்லா மஹாஜீர் மக்கி இத்தகைய உலமாக்களின் சேவை மகத்தானதாகும். பிரிட்டிஷாரின் கொடுமைகளுக்கும், கொடுங்கோள் தனத்துக்கும், தண்டனைக்கும் கொஞ்சமேனும் அஞ்சாமல் விடுதலைக்காக போராடியவர்கள் நம் நாட்டு உலமாக்களாகும்.
இத்தகைய மூத்த உலமாக்கள், தியாகச்சீலர்கள் டெல்லி பட்டணத்திலும் தேவ்பந்திலும், லக்னோவிலும் வயது முதிர்ந்த நிலையில் கையில் ஊன்றிச் சென்ற கைத்தடி பிரம்புகளுக்கு வெள்ளை சிப்பாய்களின் துப்பாக்கி தோட்டாக்கள் அஞ்சி நடு நடுங்கியது.
மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் அவர்கள் புனித, கஃபத்துல்லாஹ்வில், கருந்திரையை பிடித்து, யா-அல்லாஹ் என்தாய் நாட்டுக்கு சுதந்திரம் கொடு என்று நெஞ்சுருக பிராத்தனைச் செய்தவர்கள்.
திருக்குர்ஆன் ஷரீபுக்கு அற்புதமான விரிவுரை எழுதிய மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரராவார். சுதந்திரம் பெற்ற இந்திய நாட்டின் முதலாவது கல்வி அமைச்சராக பணியாற்றிய மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தின் பெருந்தலைவராகவும், இந்தியாவின் முதலவாது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல் குருவாகவும் திகழ்ந்த மாபெரும் விடுதலை போராட்ட வீரராவார்.
அண்ணல் காந்திஜீ அவர்களின் தலைமையில் நம் உலமாக்கள் செய்த தியாகத்தை காந்திஜீ அவர்களே பெரிதும் பாராட்டியுள்ளார்கள். தேவ்பந்து தாருல் உலூம் இஸ்லாமிய மார்க்க பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய நம்நாட்டு பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், விடுதலைப் போராட்டத்தில் தேவ்பந்து உலமாக்கள் ஆந்நியதியாகத்தை போற்றிப் பாராட்டியுள்ளார்கள்.
நம் நாட்டின் சுதந்திர தின விழாவை நாடெங்கும் நம் நாட்டு உலமாக்கள் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, பேசினார்.
நகர ஜமாஅத்துல் உலமா செயலாளர் மவ்லானா லியாகத்அலி மன்பஈ நன்றி கூறினார்.
அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் பல செய்தவர்கள் உலமா பெருமக்கள். அந்த தியாகங்கள் நன்றியுடன் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் மௌலவி தளபதி ஷபீகுர் ரஹ்மான் கூறினார்.
பரங்கிப்பேட்டை நகரில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மவ்லானா எம்.எஸ்.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி தலைமை வகித்தார்.
மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைச் செயலாளர் மவ்லானா அப்துஸ் ஸமத்ரஸாதி திருக்குர்ஆன் வசனம் ஓதினார். மவ்லானா ஏ.மஃசூக் ரஹ்மான் தாவ+தி தேசிய கீதம் பாடினார். மவ்லானா முஹம்மது ஃபாரூக் பாகவி வரவேற்றுப் பேசினார். மவ்லானா முஹம்மது ஷேக் ஆதம் மலாஹிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.ய+னுஸ், பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா மத்ரஸா ஆசிரியர் மவ்லானா சீத்தீக் அலி பாகவி, பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் முதல்வர் எம்.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் மாநில மார்க்க அணிச் செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
நம் இந்திய திருநாட்டின் 61ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் அனைத்து மக்களாலும் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களாலும் உலகெங்கும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
பரங்கிப்பேட்டையில் ஜமாஅத்துல் உலமா சபையினரால் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்துவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகும்.
நம் இந்திய திருநாட்டில் 200 ஆண்டுகாலம் ஆதிக்கம் செலுத்தி நம்மை அடிமைபடுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து வெள்ளையர்கள் நம் தாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், வெளியேற்றப்பட வேண்டும் என்று நம் நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தினரும் ஹிந்து சமுதாயத்தினரும் கிறிஸ்துவ-சீக்கிய சமுதாயத்தினரும் ஒன்றுபட்டு போராடிப் பெற்ற சுதந்திரத்தை விழாவாக இன்று கொண்டாடி வருகிறோம்.
வெள்ளையர்களைப் போன்று இந்தியர்களுக்கும் சலுகைகள் வேண்டுமென்று நம் நாட்டு தலைவர்கள் கேட்ட போது, சலுகைகள் மட்டுமல்ல@ வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டே வெளியேற வேண்டும். வெளியேற்றபட வேண்மென்று முழங்கியவர்கள் நம் நாட்டு தலைவர்கள்.
வெள்ளையர்களை வெளியேற்றப்பட வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்கியதற்காக நம் நாட்டு உலமாக்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள்... செத்து மடிந்தார்கள். சிறையில் அடைத்து கொடுமைபடுத்தப் பட்டார்கள். அத்தனை கொடுமைகளையும் சகித்து வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறும் வரை போராடியவர்கள் நம் உலமாக்கள்.
உ.பி.யிலுள்ள தேவ்பந்த் தாருல் உலூம் இஸ்லாமிய மார்க்க பல்கலைகழகத்தின் நிறுவனர் மவ்லானா காஸிம் நானூத்தவி அவர்களையும் அறிவுலக மேதை, ஆன்மீகத்தென்றல் மவ்லானா ஹீஸைன் அஹ்மத் மதனீ, மவ்லானா இப்ராஹிம் கங்கோஹி, மவ்லானா ரஷீத் அஹ்மத் தஹ்லவி, மவ்லானா இம்தாதுல்லா மஹாஜீர் மக்கி இத்தகைய உலமாக்களின் சேவை மகத்தானதாகும். பிரிட்டிஷாரின் கொடுமைகளுக்கும், கொடுங்கோள் தனத்துக்கும், தண்டனைக்கும் கொஞ்சமேனும் அஞ்சாமல் விடுதலைக்காக போராடியவர்கள் நம் நாட்டு உலமாக்களாகும்.
இத்தகைய மூத்த உலமாக்கள், தியாகச்சீலர்கள் டெல்லி பட்டணத்திலும் தேவ்பந்திலும், லக்னோவிலும் வயது முதிர்ந்த நிலையில் கையில் ஊன்றிச் சென்ற கைத்தடி பிரம்புகளுக்கு வெள்ளை சிப்பாய்களின் துப்பாக்கி தோட்டாக்கள் அஞ்சி நடு நடுங்கியது.
மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் அவர்கள் புனித, கஃபத்துல்லாஹ்வில், கருந்திரையை பிடித்து, யா-அல்லாஹ் என்தாய் நாட்டுக்கு சுதந்திரம் கொடு என்று நெஞ்சுருக பிராத்தனைச் செய்தவர்கள்.
திருக்குர்ஆன் ஷரீபுக்கு அற்புதமான விரிவுரை எழுதிய மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரராவார். சுதந்திரம் பெற்ற இந்திய நாட்டின் முதலாவது கல்வி அமைச்சராக பணியாற்றிய மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தின் பெருந்தலைவராகவும், இந்தியாவின் முதலவாது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல் குருவாகவும் திகழ்ந்த மாபெரும் விடுதலை போராட்ட வீரராவார்.
அண்ணல் காந்திஜீ அவர்களின் தலைமையில் நம் உலமாக்கள் செய்த தியாகத்தை காந்திஜீ அவர்களே பெரிதும் பாராட்டியுள்ளார்கள். தேவ்பந்து தாருல் உலூம் இஸ்லாமிய மார்க்க பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய நம்நாட்டு பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், விடுதலைப் போராட்டத்தில் தேவ்பந்து உலமாக்கள் ஆந்நியதியாகத்தை போற்றிப் பாராட்டியுள்ளார்கள்.
நம் நாட்டின் சுதந்திர தின விழாவை நாடெங்கும் நம் நாட்டு உலமாக்கள் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, பேசினார்.
நகர ஜமாஅத்துல் உலமா செயலாளர் மவ்லானா லியாகத்அலி மன்பஈ நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)