Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Friday, September 24, 2010

மருந்து தான் என்ன ?

மருந்து தான் என்ன ?
(திட்டச்சேரி கவிஞர் அன்வர் எம்.ஏ.,
தாய்ச்சபை இலக்கிய அணி, நாகப்பட்டினம்)
எந்திர விந்தைக ளாயிரம் கற்றோம்
என்னென்ன வோபல புதுமைகள் பெற்றோம்..
சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
சங்கதி பேச வழிகளைத் தேடும்
அந்தமில் லாபல சக்திகள் உற்றும்
அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்று படித்திட வில்லை
தாய்வழிச் சோதரர் தவிப்பது உண்மை !

ஒன்றெனக் காணும் உயரிய மனமும்
உயிர் நலன் பேணும் ஒழுக்கக் குணமும்
இன்றுநேற் றல்ல இப்புவி தொடங்கும்
இனியநாள் முதலாய் இருக்கலா யிற்று
பன்றியின் குணமும் பருந்துப் பார்வையும்
பாசியாய்ப் படிந்து உள்மனத் துறைந்து
நின்றிடும் நிலையை நினைக்கும் தோறும்
நிம்மதி யழிந்த நிலைதான் மிச்சம் !

இத்தனைத் தீமைக்கும் ஏற்ற மருந்து
இஸ்லாம் தந்த இனிய மருந்து
உத்தம நபிகள் உவக்கும் மருந்து
உலகினில் துன்பம் ஒழிக்கும் மருந்து
சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கைச்
சமனிட அன்பெனும் தேனில் குழைத்துப்
பத்தியம் தெய்வ நினைப்போடு உண்டால்
பாருக்குள் போருக்கும் பங்கிலை கண்டாய் !

( மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் ஹிஜ்ரி 1431 – 2010 லிருந்து )

Saturday, August 1, 2009

அவரை நான் பாராட்டவில்லை

அவரை நான் பாராட்டவில்லை

ஜமால்
நல்ல மாணவர்களை மட்டுமல்ல
சமூகத்துக்கு
முக்கியமானவர்களை தந்திருக்கிறது !

பி.காம். பி.எஸ்ஸி
மட்டுமல்ல
பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸுகளை
தந்திருக்கிறது !
எம்.காம். எம்.பி.ஏ
மட்டுமல்ல
பல எம்.பி எம்.எல்.ஏக்களையும்
தந்திருக்கிறது !

முனைவர்
பட்டத்திற்காக மட்டும்
ஆராயும் நவீன உலகில்
சமூக துயரங்களுக்கும்
தீர்வு காண
முனைபவர்களை
அளித்திருக்கிறது !

தங்கப் பதக்கத்திற்கு
மட்டும்
முக்கியத்துவம் கொடுக்கும்
கல்வி உலகில்
தனி மனித ஒழுக்கத்திற்கும்
முக்கியத்துவம்
கொடுத்திருக்கிறது !
ஜமால்
அதனுடைய சுவர்களில்
சாயம் இருக்கலாம் !
ஆனால்
அதில்
அதனை
உருவாக்கியவர்களின்
தியாகமும் இருக்கிறது !

கல் மண்
கலவையில்தான்
அது கட்டப்பட்டது !
ஆனால்
அது நல்மனம் படைத்தோரின்
கவலையால்
எழுப்பப்பட்டது !

அங்கு படித்த போது
மாணவர்கள்
மகிழ்ச்சியடைகிறார்கள் !
அவர்கள் சாதிக்கும் போது,
ஜமால்
மகிழ்ச்சியடைகிறது !

அரை நூற்றாண்டிற்கு
முன்,
கல்விக்கு
தங்கள் செல்வத்தை அளித்த
கொடையெழு வள்ளல்கள்
ஜமால் முஹம்மது
காஜாமியான் ராவுத்தரின்
”ஜமால் முஹம்மது கல்லூரி”
இன்று
சமூகத்துக்கு பல கல்வியாளர்களை அளித்து
வருகிறது !

நேர்மையான
தூய்மையான
அந்நன்மக்களின் கனவு – இன்று
பலிக்க ஆரம்பித்திருக்கிறது !

ஆம்
“அப்துர் ரஹ்மான் எம்பி”
போன்றோரை
சமூகத்துக்கு அளித்து
அதனை
பிரதிபலிக்கச் செய்திருக்கிறது !

அப்துர் ரஹ்மானை
பாராட்ட
எனக்கு தகுதி இல்லை !
ஏனென்றால்
அவரைவிட
அகவையிலும்
அறிவிலும்
அனுபவத்திலும்
நான் மிகுதி இல்லை !

சிறியவன்
நான் – அவரை
பாராட்டவில்லை !
அவரை
படிக்கிறேன் !

முத்துப்பேட்டை
அவரை
பெற்றுத்தந்தது !

மலைக்கோட்டை ஜமால்
அவருக்கு கற்றுத்தந்தது !

வேலூர் கோட்டை – அவருக்கு
வெற்றித் தந்தது !

துபை இஸ்லாமிய வங்கியில்
அவர்
பணிபுரிந்தார் !

எனினும்
கல்லூரியின் மீது
மிகுந்த பற்று வைத்திருந்தார் !

வரையறாப் பொறுப்புக்கள்
நிறைய அவருக்கு
இருந்தாலும்
கல்லூரி சமூக நிகழ்ச்சிகளில்
அவரின்
தவறாத வரவு இருக்கும் !

நாடு கடந்து
தூரத்தில் இருந்தாலும்
ஜமாலில் படித்தோருடன் – என்றும்
அவரின் உறவு இருக்கும் !

சமூகத்தில்
மனிதர் படும் துயரங்களை
அவர் கூறியதை கேட்டு
நான்
மிகுந்த கண்ணீர் வடித்திருக்கிறேன் !

மற்றவர்களை புண்படுத்தாத
மரியாதையான
அவரின் பேச்சை
ஆழ்ந்து கவனித்திருக்கிறேன் !

நீண்ட நேரம்
உருக்கமாக
பேசும் எவ்வளவோ பெரிய மனிதர்கள்
நெருக்கமாக இருந்து
மக்களுடன்
செயலாற்ற இருக்க மாட்டார்கள்
அதற்கு
இவர் விதிவிலக்கு !

மனித நேயம் என்ற
தலைப்பில்
அழகாக பேசும்
எவ்வளவோ மனிதர்களின் இதயம்,
மனிதர்கள்
உதவி வந்து கேட்டால்
இளகுவதில்லை
இவர் – அப்படியல்ல
உதவுவதுதான்
இவரின் இலக்கு !

முதுகலை
பொருளாதாரத்தில்
தங்கப் பதக்கம்
பெற்ற அவர்,
சமுதாயம்
முன்னேற
சங்கம் பல துவக்க
காரணமானார் !

தங்கள்
தேவையை மட்டுமே
நோக்கி ஓடும்
அவசர உலகில்
சமூக சேவையில்
தன்னை அர்ப்பணித்தார் !

எம்பியாகி
இருக்கும் இவர் – மன்றத்தில்
மக்கள் பிரச்சினைகளை
எடுத்தியம்பி வருவார் !

துபையில் இருந்து
தில்லியை நோக்கிய
அவரது சேவை பயணம்

பல பயன்களை
சமூகத்துக்கு
கொண்டு வரணும் !

-திருச்சி A. முஹம்மது அபுதாஹிர்

அவரை நான் பாராட்டவில்லை

அவரை நான் பாராட்டவில்லை

ஜமால்
நல்ல மாணவர்களை மட்டுமல்ல
சமூகத்துக்கு
முக்கியமானவர்களை தந்திருக்கிறது !

பி.காம். பி.எஸ்ஸி
மட்டுமல்ல
பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸுகளை
தந்திருக்கிறது !
எம்.காம். எம்.பி.ஏ
மட்டுமல்ல
பல எம்.பி எம்.எல்.ஏக்களையும்
தந்திருக்கிறது !

முனைவர்
பட்டத்திற்காக மட்டும்
ஆராயும் நவீன உலகில்
சமூக துயரங்களுக்கும்
தீர்வு காண
முனைபவர்களை
அளித்திருக்கிறது !

தங்கப் பதக்கத்திற்கு
மட்டும்
முக்கியத்துவம் கொடுக்கும்
கல்வி உலகில்
தனி மனித ஒழுக்கத்திற்கும்
முக்கியத்துவம்
கொடுத்திருக்கிறது !
ஜமால்
அதனுடைய சுவர்களில்
சாயம் இருக்கலாம் !
ஆனால்
அதில்
அதனை
உருவாக்கியவர்களின்
தியாகமும் இருக்கிறது !

கல் மண்
கலவையில்தான்
அது கட்டப்பட்டது !
ஆனால்
அது நல்மனம் படைத்தோரின்
கவலையால்
எழுப்பப்பட்டது !

அங்கு படித்த போது
மாணவர்கள்
மகிழ்ச்சியடைகிறார்கள் !
அவர்கள் சாதிக்கும் போது,
ஜமால்
மகிழ்ச்சியடைகிறது !

அரை நூற்றாண்டிற்கு
முன்,
கல்விக்கு
தங்கள் செல்வத்தை அளித்த
கொடையெழு வள்ளல்கள்
ஜமால் முஹம்மது
காஜாமியான் ராவுத்தரின்
”ஜமால் முஹம்மது கல்லூரி”
இன்று
சமூகத்துக்கு பல கல்வியாளர்களை அளித்து
வருகிறது !

நேர்மையான
தூய்மையான
அந்நன்மக்களின் கனவு – இன்று
பலிக்க ஆரம்பித்திருக்கிறது !

ஆம்
“அப்துர் ரஹ்மான் எம்பி”
போன்றோரை
சமூகத்துக்கு அளித்து
அதனை
பிரதிபலிக்கச் செய்திருக்கிறது !

அப்துர் ரஹ்மானை
பாராட்ட
எனக்கு தகுதி இல்லை !
ஏனென்றால்
அவரைவிட
அகவையிலும்
அறிவிலும்
அனுபவத்திலும்
நான் மிகுதி இல்லை !

சிறியவன்
நான் – அவரை
பாராட்டவில்லை !
அவரை
படிக்கிறேன் !

முத்துப்பேட்டை
அவரை
பெற்றுத்தந்தது !

மலைக்கோட்டை ஜமால்
அவருக்கு கற்றுத்தந்தது !

வேலூர் கோட்டை – அவருக்கு
வெற்றித் தந்தது !

துபை இஸ்லாமிய வங்கியில்
அவர்
பணிபுரிந்தார் !

எனினும்
கல்லூரியின் மீது
மிகுந்த பற்று வைத்திருந்தார் !

வரையறாப் பொறுப்புக்கள்
நிறைய அவருக்கு
இருந்தாலும்
கல்லூரி சமூக நிகழ்ச்சிகளில்
அவரின்
தவறாத வரவு இருக்கும் !

நாடு கடந்து
தூரத்தில் இருந்தாலும்
ஜமாலில் படித்தோருடன் – என்றும்
அவரின் உறவு இருக்கும் !

சமூகத்தில்
மனிதர் படும் துயரங்களை
அவர் கூறியதை கேட்டு
நான்
மிகுந்த கண்ணீர் வடித்திருக்கிறேன் !

மற்றவர்களை புண்படுத்தாத
மரியாதையான
அவரின் பேச்சை
ஆழ்ந்து கவனித்திருக்கிறேன் !

நீண்ட நேரம்
உருக்கமாக
பேசும் எவ்வளவோ பெரிய மனிதர்கள்
நெருக்கமாக இருந்து
மக்களுடன்
செயலாற்ற இருக்க மாட்டார்கள்
அதற்கு
இவர் விதிவிலக்கு !

மனித நேயம் என்ற
தலைப்பில்
அழகாக பேசும்
எவ்வளவோ மனிதர்களின் இதயம்,
மனிதர்கள்
உதவி வந்து கேட்டால்
இளகுவதில்லை
இவர் – அப்படியல்ல
உதவுவதுதான்
இவரின் இலக்கு !

முதுகலை
பொருளாதாரத்தில்
தங்கப் பதக்கம்
பெற்ற அவர்,
சமுதாயம்
முன்னேற
சங்கம் பல துவக்க
காரணமானார் !

தங்கள்
தேவையை மட்டுமே
நோக்கி ஓடும்
அவசர உலகில்
சமூக சேவையில்
தன்னை அர்ப்பணித்தார் !

எம்பியாகி
இருக்கும் இவர் – மன்றத்தில்
மக்கள் பிரச்சினைகளை
எடுத்தியம்பி வருவார் !

துபையில் இருந்து
தில்லியை நோக்கிய
அவரது சேவை பயணம்

பல பயன்களை
சமூகத்துக்கு
கொண்டு வரணும் !

-திருச்சி A. முஹம்மது அபுதாஹிர்