Showing posts with label பென்னாகரம். Show all posts
Showing posts with label பென்னாகரம். Show all posts

Saturday, December 26, 2009

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. கலந்து கொள்கிறார்

சென்னை, டிச.26-

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர்கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் பி.இன்பசேகரன் போட்டி யிடுவார் என்று முதல்வர் கலைஞர் அறிவித்துள் ளார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பென்னாகரம் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறி முக செயல்வீரர்கள் கூட்டம், பென்னாகரத்தில் உள்ள அண்ணா திடலில் காலை 9 மணிக்கு நடை பெறுகிறது.

இந்த கூட்டத்துக்கு தர்மபுரி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் தன கோடி தலைமை தாங்கு கிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு சிறப் புரை ஆற்றுகிறார். மற்றும் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்நாடு காங்கிரஸ் சட்ட மன்றக் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம். எல்.ஏ., விவசாய தொழி லாளர் சங்க நிறுவனத் தலைவர் பொன் குமார், அருந்ததியர் மக்கள் கட் சித்தலைவர் வலசை ரவிச் சந்திரன், தர்மபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வ.முல்லைவேந்தன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் டி.செங்குட்டுவன் எம்.எல். ஏ., எம்.பி.க்கள் இ.ஜி. சுகவனம், ஆர்.தாமரைச் செல்வன் ஆகியோர் பேசு கிறார்கள்.

மேற்கண்ட தகவல் தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது.