Showing posts with label வியாபாரம். Show all posts
Showing posts with label வியாபாரம். Show all posts

Wednesday, April 8, 2009

சமுதாயம் என்ற பெயரில் அரசியல் வியாபாரம்

Anonymous has left a new comment on your post "ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜு...":

ஆடுதுறை காக்கா, சுலைமான் பாய் உரையாடலும் வெகு அருமை.

விமர்சனங்கள் இப்படி தான் இருக்க வேண்டும். தமுமுக தலைமை மற்றும் அதன் வால் மமக இதற்கு தலைமை இல்லை என்பதால் இன்று வரை யாருடன் கூட்டணி வைப்பது என்று தினமும் ஒரு செய்தியை போட்டு சமுதாய இளைஞர்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களiன் நாற்றம் பி.பி.சி வரை தெரிந்து விட்டது. சமுதாயம் என்ற பெயரில் அரசியல் வியாபாரம் செய்ய இருக்கிறோம் என்று இவர்களே பட்டவர்த்தமாக டி.வி., ரேடியோ பத்திரிகை என்று முழக்க செய்கிறார்கள் ஆனால் கடைசியில் இந்த தன்மான சிங்கம் திராவிட கட்சிகளiடம் அசிங்கப்பட்டு சிகப்பு லைட் கார் வலம் வந்ததையும் இழந்து நிற்கிறது. இப்போது பி.ஜே,பி தான் பாக்கி இவர்கள் கூட்டணிபேசுவதற்கு…இப்படி ஒருவர் என்னிடம் சொன்னார் அதற்கு நான் தமுமுக நிச்சயம் பி.ஜே.பிக்கு போக வாய்ப்பு இல்லை காரணம் அதில் அவர்களை எதிர்த்து போராடும் பி.ஜே பெயர் இருப்பதால் நாளை கூட்டணிசேர்ந்து தேர்தல் பிராச்சாரத்தின் போது பி.ஜெ பி.ஜெ என்று சொல்ல தமுமுகவினர்களுக்கு மன்னிக்கவும் மமக க்கு கஷ்டமாக இருக்கும். எனவே நமக்கு தெரிந்த கட்சி இப்போது பாக்கி சுப்பிரமணிசாமி அல்லது மாயவதி கட்சிக்கு வேண்டும் என்றால் மமக கூட்டணிவைத்து தேர்தலை சந்திக்கும் பிறகு தேர்தலில் டெபாசிட் இழந்தவுடன் சமுதாய கண்மணிகளே நாம் சேர்ந்த கூட்டணி தமிழகத்திற்கு புதியவர்கள் எனவே அடுத்த தேர்தலில் சரியான கூட்டணியை பெற வேண்டும் என்று அறிக்கை விடுவார்கள். அவர்களுக்கு இருக்கவே இருக்கு மமக கொள்கை பரப்பு வாரஇதழ் மக்கள் உரிமை அத்துடன் தினமும் இணையத்தில் சுடச் சுட செய்தி அறிவித்து அப்பாவி சமுதாய இளைஞர்களை திசை மாற்றுவார்கள். தமுமுக வின் இந்த திருவிளையாடல் எல்லாம் இந்த தேர்தலுடன் மூடுவிழா தான் மீண்டும் அல்லாஹுfவின் மீது சத்தியம் செய்து விட்டு யாரும் கேட்டால் ஒன்று இரண்டு சீட்டு வந்தால் நம் சமுதாயத்திற்கு எந்த வித நன்மையும் இல்லை என்று ஒப்புக்கு சொல்லி சமாளiப்புஸ் செய்வார்கள். இவர்களுக்கு இது ஒன்றும் பழக்கப்படாத விசயம் அல்ல. வார்த்தை ஜலங்கள் மூலம் சமுதாயத்தை அழிவு பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றே காலத்தை கடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு அல்லாஹு தான் நல்ல புத்தியை கொடுக்கனும்.
Abu Mohammed Dubai



Posted by Anonymous to அமீரக காயிதெ மில்லத் பேரவை at April 8, 2009 7:31 PM