Showing posts with label திருமங்கலம். Show all posts
Showing posts with label திருமங்கலம். Show all posts

Saturday, January 3, 2009

திருமங்கலம் இடைத்தேர்தல்: முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பிரச்சாரக் குழு! பேராசிரியர் தகவல்!!

திருமங்கலம் இடைத்தேர்தல்: முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பிரச்சாரக் குழு! பேராசிரியர் தகவல்!!

http://www.muslimleaguetn.com/news.asp

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பிரசாரம் செய்வதற்காக தமிழக முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் பாசித், கலீலுர் ரஹ்மான் ஆகியோர் தலைமையில் பிரச்சாரக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுசெயலாளர் காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்.

இந்திய ய+னியன் முஸ்லிம், லீகின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் காயல்பட்டினத்தில் டிசம்பர் 27ல் நடந்தது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொது செயலாளர் காதர் மொய்தீன் எம்.பி. தலைமை வகித்தார்.

ஷபீகுர்ரஹ்மான் கிராஅத் ஓதினார். தவ்ஹீத், முத்துவாப்பா ஆகியோர் அரபி கீதம் பாடினர். தலைமை நிலைய செயலாளர் முஹம்மது அப+பக்கர் வரவேற்றார். மாநில பொருளாளர் செய்யது அகமது, கலீலூர் ரஹ்மான் எம்.எல்.ஏ., அப்துல் பாசித் எம்.எல்.ஏ., மாநில செயலாளர்கள் காயல் மகப+ப், அப+பக்கர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வாவு நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் காதர் மொய்தீன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்காக உழைக்க, எம்.எல்.ஏ.,க்களான அப்துல் பாசித், கலீலூர் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் அடங்கிய தேர் தல் பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக வெற்றியில் எந்தவித சந்தேகமும் கிடையாது. மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் சோனியா ஆலோசனையில் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி மேலும் தொடர ஜனநாயக சமயசார்பற்ற சமூக நீதிக்காக பாடுபடும் கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம்.

தமிழகத்தில் கலைஞர் தலைமையில் கூட்டணி அமைத்து அவரது வெற்றிக்காக பாடுபடுவோம். முஸ்லிம் லீகில் மாணவர்கள், இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தேச பற்றை வலியுறுத்த ரத்ததான முகாம் நடத்துகிறோம். மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலில் நாட்டிற்காக தியாகம் செய்த தியாக செம்மல்கள் ஆத்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடத்தினோம்.

தமிழக அரசு ப+ரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டுவர ஆரம்ப திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசு சார்பில் சாராய கடைகள் திறக்கப்படாது. இரவு நேர விற்பனை ஒரு மணிநேரம் குறைந்தது ஆகியவற்றை வரவேற்கிறோம். மேலும் பள்ளிகள் அருகில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும். ப+ரண மதுவிலக்கை விரைவில் அமுல்படுத்த வேண்டும்.

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு உலக அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. இந்திய அரசின் நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. தீவிர வாதம் மனித சமுதாயத்திற்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., கலீலூர் ரஹ்மான் எம்.எல். ஏ., பொருளாளர் வடக்கு கோட்டையார், மாநில செயலாளர் காயல் மகப+ப் மற்றும் பலர் உடனிருந்தனர்.