Showing posts with label சிங்கம்பட்டி. Show all posts
Showing posts with label சிங்கம்பட்டி. Show all posts

Tuesday, May 11, 2010

திருநெல்வேலி மாவட்டம் அம்பை வட்டம் ஜமீன் சிங்கம்பட்டியில் முஸ்லிம் லீக் அமைப்புக்கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பை வட்டம் ஜமீன் சிங்கம்பட்டியில் முஸ்லிம் லீக் அமைப்புக்கூட்டம்.


திருநெல்வேலியிலிருந்து மணிமுத்தாறு அணைக்கட்டு செல்லும் வழியில் உள்ளது ஜமீன் சிங்கம்பட்டி. அது சுதந்திர காலத்துக்கு முன்னர் பெருமையோடு திகழ்ந்த பாளையங்களில் ஒன்றாக இருந்தது..சிங்கம்பட்டி ஜமீன் தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் இன்றளவும் அப்பகுதி முஸ்லிம் மக்களால் பெரிதும் மதித்துப் பாராட்டப்படுபவர்.

அவரது நிர்வாகத்திலிருந்த பல்வேறு பகுதி முஸ்லிம் மக்களுக்கு பள்ளி வாசல் மற்றம் ஈத்கா திடல் அமைக்க இடவசதி செய்து கொடுத்த தீர்த்தபதி அரசா,; சிங்கம்பட்டி முஸ்லிம் மக்களுக்கு பள்ளிவாசல் கட்ட சுமார் 60 சென்ட் நிலத்தை அன்பளிப்பாக வழங்கியதோடு பள்ளிவாசல் அமையவும் மிகவும் தொண்டுள்ளம் கொண்டு, உதவிகளும் செய்தார். பல்சமய மக்கள் ஒன்றாக வாழும் பகுதிகளில், பள்ளிவாசல் பாங்கோசையும் சர்ச்சுகளின் மணியோசையும்.கோவிலில் எழுப்பும் சங்கொலியும் இணக்கமாக ஒலித்தால் தான் அப்பகுதியில் மதநல்லிணக்கம் பாதுகாக்கப்படும் என்ற இலக்கணத்தை இன்றளவும் சொல்லிக்காட்டி வருபவர்.அவர் திருநெல்வேலிச்சீமையின் தலை சிறந்த மத நல்லிணக்க வாதியாகவும்,மிகச்சிறந்த தமிழறிஞர்களில் ஒருவராகவும் உள்ளார்..அவரது ஆங்கிலத் திறமையும் அசாதாரணமானதாகும்.இஸ்லாமிய ஞானவான்கள் மீது அளவு கடந்த மரியாதைகாட்டி வருபவர்.

அவர்களது சமஸ்தானத்தில் தளபதிகளாக இருந்த முஸ்லிம் வீரர்களின் படங்களும் சாகசங்களும் அவர்களது அரண்மணயில் இன்றும் பல வீர வரலாறுகளைச் சொல்லிக்காட்டுகின்றன. அத்தகு வீர வழிக் கொடியை கொண்ட இஸ்லாமிய சமூகத்தின் மீதும் அவர்களின் சந்ததியினர் மீதும் ராஜா கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் அவர் சொல்லிக்காட்டும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

அத்தகு பெருமை வாய்ந்த சிங்கம்பட்டியில் உள்ள ஜூம்ஆ பள்ளி வாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாக அமைப்புக்கூட்டம் 7.5.10.அன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கவிஞர் வீரை எம்.அப்தர் ரஹ்மான் தலைமையில் நடை பெற்றது .நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் மாநில் மாணவரணி அமைப்பாளருமான எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் சிறப்புரையாற்றினார். மாவட்டதுணைச்செயலாளர் கானகத்து மீரான், அம்பா சமுத்திரம் வட்டார முஸ்லிம் லீக் அமைப்பாளர் அம்பை அமானுல்லா,பள்ளி வாசல் இமாம் முஹம்மது அனீபா உஸ்மானி,பள்ளிவாசல் நிர்வாகி ஏ.அபுபக்கர்,எம்.அசன் முகைதீன்,எஸ்.சாகுல் அமீது,எஸ்.முகைதீன்,ஏ.ரப்பானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.