Showing posts with label கே.எம்.கே. Show all posts
Showing posts with label கே.எம்.கே. Show all posts

Monday, September 13, 2010

இறையருள் எல்லோருக்கும் நிறைக! புதிய சரித்திரம் படைப்போம்! - கே.எம்.கே

இறையருள் எல்லோருக்கும் நிறைக! புதிய சரித்திரம் படைப்போம்! - கே.எம்.கே

நோன்புப் பெருநாள் நிறைவுற்று, புதிய வாழ்க்கை துவங்குகிறது நோன்பின் மாண்பால் புவனம் முழுவதிலும் சுவன சுகமும் இன்பமும் பெருகிட வேண்டும் என்றே நோன்பாளிகள் வேண்டினர். எதையும் மறந்து எண்ணங்களைத்துறந்து இதயம் திறந்து இறைவனிடம் முறையிடும் போது அதற்குரிய பலனும் பயனும் நிச்சயமாகவே கிடைக்கவே செய்கிறது.
நோன்பாளிகள் வாழ்த்துக்கு உரியவர்கள். இதனை கவிஞர் தா. ஜெய்புன்னிஷா தனது கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இகபர சுகமெலாம் ஈந்திடும் நோன்பினை
இனிதுற நோற்பவர் நுழைவர்நல் சுவனமே
செகமிதில் எண்ணம் சொல் செயல்பாடுயாவிலும்
சேர்ந்திடும் நன்மையால் சிறப்புறும் புவனமே||
புவனத்தைப் புனிதப்படுத்தும் நோன்பிருந்து எங்களுக்கும் வாழ்த்துக்களை வாரி வழங்கிய அத்துணை நன்னெஞ்சங்களுக்கும் நமது இதய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்தாம் எத்தனை வகை? அடடா, இப்படி யெல்லாம் வாழ்த்து கூற முடியுமா? என்று வியப்புற்று அதிசயிக்கச் செய்யும் அற்புத வாசகங்கள்! அடுக்கு மொழிகள்! உள்ளத்தைத் தொட்டிழுக்கும் கவிதை வரிகள்! அவை யாவும் சொற்செண்டுகள் மட்டுமா? தெவிட்டாத கற்கண்டுகள்!
இறையருள் எல்லோருக்கும் நிறைக!
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த வாழ்த்துக்களுக்கு ஈடாக, ஏன், கொஞ்சம் அதிகமாகவே பிற மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்துள்ளன. எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுத வேண்டும் என்னும் வேணவா ஏற்பட்டதன் விளைவே இந்தக் கட்டுரை.
இதைக் கட்டுரை என்று கூறுவதைவிட, எங்களின் கல்பில் - இதயத்தில் ஊறிய நன்றிப் பெருக்கின் வெளிப்பாடாகவே கருத வேண்டும்.
வாழ்த்துச் செய்திகளில் வந்த வைர வரிகளைப் பார்த்தபோது, அவற்றில் தலை சிறந்தவற்றுக்கு விருதும், பரிசும் வழங்கி வரிசைப்படுத்தினால் என்ன என்னும் சிந்தனை கூடப் பிறந்தது. இந்திய மாநிலங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புகள் தினம் தினம் ப+த்த வண்ணமாக உள்ளன. புதிய புதிய தலைவர்கள் - நிர்வாகிகளாகப் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.
கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மட்டுமே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது என்று எழுதுவோரும், ஏகடியம் பேசுவோரும் எங்கும் உள்ளனர். ஆனால், இந்த அந்த விமர்சனக்காரர்கள் பெரும் வியப்படைந்தவர்களாக மாறி விடுவார்கள்.
நோன்பு மனதுக்கு இதம் சேர்த்தது@ உடலுக்கு புதிய தெம்பைத் தந்தது@ சமூகத்திற்குப் புதிய சிந்தனையைத் தந்தது@ தேசத்துக்கு புதிய உறவுப் பாதையை வழங் கியது@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு இதுவரை இல்லாத தொரு புதிய வரலாற்றையே இந்த ஆண்டு ரமளான் தந்திருக்கிறது.
வார்த்தைகளில் வந்த வாழ்த்துச் செய்திகளே!
நாளைக்கு செயல்பாடுகளால் வந்த வெற்றிகளாக
மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
வாழ்த்தாக வந்ததை வெற்றிக்கு இறைவன் தந்த விதையாக ஏற்போம்! புதிய சரித்திரம் படைப்போம்!

http://www.muslimleaguetn.com/news.asp?id=1843

Monday, March 22, 2010

வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில்...கே.எம்.கே

வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில்...கே.எம்.கே

இந்த வாழ்க்கைப் பயண நிர்ணயம் என்பது இறைவனின் கட்டளையில் உள்ளது என்கிறது இஸ்லாம்.

‘‘தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதன் மூலம், மனித வாழ்வில் நிகழ்வது யாவும் அவரவர் வாழ்வில் பிணைக்கப் பட்டிருக்கிறது என்று தமிழ்நெறி கூறுகிறது.

மனிதன், இறைவனின் படைப்பு. படைப்பில் இயல்பாக எது இணைக்கப்பட்டும், பிணைக்கப்பட்டும் உள்ளதோ, அதுவும் இறைவனின் படைப்பே ஆகும்.

இஸ்லாமிய நெறியை இன்பத் தமிழ்நெறி முன்னறிவிப்புச் செய்திருக்கிறது இன்பத் தமிழை இஸ்லாம் உலகப் பொதுவுடைமை ஆக்கியிருக்கிறது.

இதனை எண்ணி எண்ணி இறும்பூது எய்தக் கூடிய அறிஞர்கள் கூட்டம் அகிலமெங்கும் பரவியிருக்கிறது.

இதைப் படிக்கிற தோழர்கள், நான் ஏன் இந்தப் பீடிகை போடுகிறேன் என்று கருதுவர்.

வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஏதோ ஒருவகையில் எங்கோ ஒரு காரணம் மறைந்து கிடக்கிறது.

வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வேலூர் அருகில் உள்ள அரியூர் ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா அறக்கட்டளை சார்பில் நூறு படுக்கை உள்ள மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. எம்.பி., என்ற முறையில் அதில் பங்கேற்றேன். என்னோடு முன்னாள் எம்.பி. முஹம்மது சகி, வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது ஹனீப், செயலாளர் சாந்த் பாஷா, சகோதரர் தமீம், தாசில்தார் ஷம்சு அலியார் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். சாமியாரைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித் தோம். மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா சாமியார் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்., பொன்னாடை வழங்கிவிட்டு விடைபெற்றுச் செல்ல முயன்ற எங்களை வற்புறுத்தி, அவருக்கு அருகில் அமரச் செய்தார். காலை உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். எல்லோரும் அவர் அருகில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் காலைச் சிற்றுண்டிக்கான ஏற்பாடு களை செய்து விட்டு எங்களை அழைத்தனர். அப்பொழுது முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மற்றும் பலர் அங்கே வந்தவர்கள், சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அதற்குப் பிறகு உட்கார்ந்திருந்த நாங்கள் எழுந்தோம்.

எனது பழக்கம் ஒன்று உண்டு. தரையில் உட்காரும் போது தொழுகையில் இருப்பு இருப்பதுபோல அமர்வது எனது இளமை தொட்டுவரும் வழக்கம். இருப்பில் இருந்ததைப் போல எல்லாருடனும் நானும் எழுந்தேன். கால்கள் வலி இருந்ததால் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி எழுந்தேன். எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ‘தினமலர் போட்டோகிராபர் எங்களையும் படம் எடுத்துள்ளார். அடுத்த நாள் மந்திரி காலில் விழுந்து வணங்குவதையும், நான் கையை ஊன்றி எழுவதையும் தினமலர் வெளியிட் டது. அதில் சாமியார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர் என்று என்னையும் சேர்த்து எழுதி படத்தை யும் பிரசுரித்து இருந்தனர். பல நண்பர்கள் பத்திரிகையை பார்த்து என்னிடமே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இதுபற்றி சக்தி அம்மா கோயில் நிர்வாகத் துக்குத் தொடர்பு கொண்ட போது, தினமலர் பத்திரிகை யையும், நிருபரையும் சாமியார் மிகவும் கடுமையாக கடிந்து கொண்டுள்ளார். எம்.பி.யை. முஸ்லிமை இப்படிப் பிரசுரிக்கலாமா? என்று கடுமையாகப் பேசினார். அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்., நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தவறுக்கு நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம் என்று தெரிவித் தனர். அதற்கு மேல் அந்தப் பிரச்சினையை நான் பெரிது படுத்தவில்லை. அதோடு விட்டுவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து குமுதம், ரிப்போர்ட்டரில் என் மீது தேர்தல் வழக்குத் தொடுத்துள்ள இக்பால் என்பவர் அவதூறு பரப்பும் நோக்கத்தில் முஸ்லிம் லீக் தலைவர் சாமியார் காலில் விழலாமா? என்று கேள்வி எழுப்பி தினமலர் வெளியிட்ட படத்தை வெளியிடக் கூறியுள் ளார். வேலூர் குமுதம் ரிப்போர்ட்டர் என்னுடன் தொடர்பு கொண்டு அந்தப் படம் பற்றியும், சம்பவம் பற்றியும் கேட்டனர். எனது விளக்கத்தை வெளியிட்ட னர். அத்துடன் வேலூரில் இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதனை ஒட்டி தினமலர் பத்திரிகை படத்தையும், என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியையும் பல லட்சம் அச்சிட்டு தமிழகம் எங்கும் அனுப்பும் காரியத்தை முஸ்லிம் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் செய்தனர். முஸ்லிம் லீகில் உள்ளே இருந்து குழுபறிக்க நினைத்து தூக்கி எறியப்பட்டவர்கள் இதற்கு மிகமிக உடந்தையாக இருந்தனர். அதோடு ஊடகங்களிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக கேரளா விலும் இதனைப் பரப்பினார்கள்.

இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லவும் விளக்கம் சொல்லவும் விரும்பியதில்லை. ஏனெனில், சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக்கு கூறியதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

முஸ்லிம் லீகைப் பற்றி நமது பிரச்சாரம் போதிய அளவில் இல்லை. அதனை ஈடுகட்ட லீகின் எதிரிகள் இப்படி அவதூறுகள் புரிந்து லீகிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று அடிக்கடி கூறுவார். அதைத்தான் நாம் நினைத்துக் கொள்கிறோம்.

Saturday, September 5, 2009

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே

சென்ற வருடம் புனிதஹாஜிகள் அனுப்பியதில் ஊழல் நடந்து விட்டது என்றும், அன்றைய அமைச்சர் இ. அஹமது அவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்றும் ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம் உரிமையை மறைத்து விடலாம் என்னும் நப்பாசையில் தமிழகத்தில் சில சமுதாய புல்லுருவிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.
சென்ற ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அவருக்குக் கீழ் வெளிவிவகார இணை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இ. அஹமது அவர்கள்.
சென்ற ஐந்து ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், குறிப்பாக இ. அஹமது அவர்கள் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.

இந்தியாவுக்கும் முஸ்லிம் உலகிற்கும், குறிப்பாக அரபுலகத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பிலான நெருக்கத்தை உருவாக்கி, இந்தியாவின் பேருக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்துள்ளவர் அமைச்சர் இ. அஹமது என்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக முஸ்லிம் உலகத்திலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பேரும் செயல்பாடும் மிகவும் பரவலாகப் புகழப்படுகிறது. இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட இன்றைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது மத்திய மந்திரியாக இருக்கிறார் என்று பெருமையோடு பேசுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான எழுச்சியையும் ஏற்றத்தையும் கண்டு மனம் புழுங்கும் சிலர், இ. அஹமது அவர்களைப் பற்றி குறை பேசத் துவங்கியுள்ளனர். முஸ்லிம் லீக் என்னும் பெயரைக் கேட்டாலே சீறிப்பாயும் சிலர் இன்னும் இருக்கிறார் கள். முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹமது அவர்களின் பெயர் இத்தகையவர்களுக்கு அவர்களின் காதுகளில் நாராசமாகக் கேட்கிறது. இதனால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அதற்குத் தமிழகத்தில் சிலர் எடுபிடி வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் புனித ஹஜ் பணிகள் மிகவும் அதிகமாகக் செல்வதற்கு வழிவகை கண்டவர் இ. அஹமதுதான்! சவ+தி மன்னருடனும் அமைச்சர்களு டனும் நேரில் பேசி, இந்தியாவின் கோட்டாவை அதிகரிக்கச் செய்து ஒரு லட்சம் அறுபது ஆயிரம் பேர் புனிதப் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தியவர் இ. அஹமதுதான்.
சவ+தி அரசின் ஒப்பந்தப்படி 4ல் ஒரு பங்கினர் தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற் கொள்ளலாம், 4ல் மூன்று பங்கினர் அரசாங்க ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வர்.

மாநிலங்களுக்கு ஹஜ் கோட்டா என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.
சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!

பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.
சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!

பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய பொதுச்செயலாளர்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்