Showing posts with label இறையருள். Show all posts
Showing posts with label இறையருள். Show all posts

Monday, September 13, 2010

இறையருள் எல்லோருக்கும் நிறைக! புதிய சரித்திரம் படைப்போம்! - கே.எம்.கே

இறையருள் எல்லோருக்கும் நிறைக! புதிய சரித்திரம் படைப்போம்! - கே.எம்.கே

நோன்புப் பெருநாள் நிறைவுற்று, புதிய வாழ்க்கை துவங்குகிறது நோன்பின் மாண்பால் புவனம் முழுவதிலும் சுவன சுகமும் இன்பமும் பெருகிட வேண்டும் என்றே நோன்பாளிகள் வேண்டினர். எதையும் மறந்து எண்ணங்களைத்துறந்து இதயம் திறந்து இறைவனிடம் முறையிடும் போது அதற்குரிய பலனும் பயனும் நிச்சயமாகவே கிடைக்கவே செய்கிறது.
நோன்பாளிகள் வாழ்த்துக்கு உரியவர்கள். இதனை கவிஞர் தா. ஜெய்புன்னிஷா தனது கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இகபர சுகமெலாம் ஈந்திடும் நோன்பினை
இனிதுற நோற்பவர் நுழைவர்நல் சுவனமே
செகமிதில் எண்ணம் சொல் செயல்பாடுயாவிலும்
சேர்ந்திடும் நன்மையால் சிறப்புறும் புவனமே||
புவனத்தைப் புனிதப்படுத்தும் நோன்பிருந்து எங்களுக்கும் வாழ்த்துக்களை வாரி வழங்கிய அத்துணை நன்னெஞ்சங்களுக்கும் நமது இதய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்தாம் எத்தனை வகை? அடடா, இப்படி யெல்லாம் வாழ்த்து கூற முடியுமா? என்று வியப்புற்று அதிசயிக்கச் செய்யும் அற்புத வாசகங்கள்! அடுக்கு மொழிகள்! உள்ளத்தைத் தொட்டிழுக்கும் கவிதை வரிகள்! அவை யாவும் சொற்செண்டுகள் மட்டுமா? தெவிட்டாத கற்கண்டுகள்!
இறையருள் எல்லோருக்கும் நிறைக!
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த வாழ்த்துக்களுக்கு ஈடாக, ஏன், கொஞ்சம் அதிகமாகவே பிற மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்துள்ளன. எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுத வேண்டும் என்னும் வேணவா ஏற்பட்டதன் விளைவே இந்தக் கட்டுரை.
இதைக் கட்டுரை என்று கூறுவதைவிட, எங்களின் கல்பில் - இதயத்தில் ஊறிய நன்றிப் பெருக்கின் வெளிப்பாடாகவே கருத வேண்டும்.
வாழ்த்துச் செய்திகளில் வந்த வைர வரிகளைப் பார்த்தபோது, அவற்றில் தலை சிறந்தவற்றுக்கு விருதும், பரிசும் வழங்கி வரிசைப்படுத்தினால் என்ன என்னும் சிந்தனை கூடப் பிறந்தது. இந்திய மாநிலங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புகள் தினம் தினம் ப+த்த வண்ணமாக உள்ளன. புதிய புதிய தலைவர்கள் - நிர்வாகிகளாகப் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.
கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மட்டுமே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது என்று எழுதுவோரும், ஏகடியம் பேசுவோரும் எங்கும் உள்ளனர். ஆனால், இந்த அந்த விமர்சனக்காரர்கள் பெரும் வியப்படைந்தவர்களாக மாறி விடுவார்கள்.
நோன்பு மனதுக்கு இதம் சேர்த்தது@ உடலுக்கு புதிய தெம்பைத் தந்தது@ சமூகத்திற்குப் புதிய சிந்தனையைத் தந்தது@ தேசத்துக்கு புதிய உறவுப் பாதையை வழங் கியது@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு இதுவரை இல்லாத தொரு புதிய வரலாற்றையே இந்த ஆண்டு ரமளான் தந்திருக்கிறது.
வார்த்தைகளில் வந்த வாழ்த்துச் செய்திகளே!
நாளைக்கு செயல்பாடுகளால் வந்த வெற்றிகளாக
மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
வாழ்த்தாக வந்ததை வெற்றிக்கு இறைவன் தந்த விதையாக ஏற்போம்! புதிய சரித்திரம் படைப்போம்!

http://www.muslimleaguetn.com/news.asp?id=1843