Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Monday, May 4, 2009

அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றின் அப்பட்டமான உண்மை!!!

அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றின் அப்பட்டமான உண்மை!!!


* ராஜேந்திர சச்சார் கமிட்டி அமைத்து இந்தியா முழுவதிலுமுள்ள முஸ்லிம்களின் இன்றைய பொருளாதார நிலையை வெளியில் கொண்டு வர முதல் முக்கிய காரணமாக இருந்தவர்,

* மத்தியில் சிருபான்மையினருக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தி வெற்றி கண்டவர்,

* மத்ரஸாக்களில் தீவிர வாதம் போதிக்கப் படுவதில்லை என்று வீர கர்ஜணை செய்ததுடன் நானும் அங்கிருந்து வந்தவன் தான் என்பதை பாராளுமன்றத்தில் பதிவு செய்தவர்,

* இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை அதே இடத்தில் நிர்மானிக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை ஆணித்தரமாக நடப்பு பாராளுமன்றத்திலேயே வைத்தவர்,

* மத்ரஸாக்களுக்கு சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயுவை அதிக விலையாக மாற்றியதை கலைந்து உடனே அதே சலுகையை தர வேண்டும் என்று பாராளூமன்றத்தில் வாதிட்டவர்,

* பள்ளிவாசல்களில் கடைபிடிக்கப்படும் திருமண நிக்காஹ் (தஃப்தர்) பதிவேட்டை அரசுப் பதிவாக அங்கீகரிக்க வேண்டும்,இதை அரசின் சட்டமாக இயற்றுங்கள் என்ற வாதத்தை பாராளுமன்றத்தில் பதிய வைத்தவர்,

உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான்இவ்வளவு காரியங்களையும் விளம்பரத்தின் வெளிச்சமின்றி செய்து முடித்த சமுதாயத்தின் ஒப்ப்ற்றத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர்,கே.எம்.காதர் மொஹிதீனஅவர்கள்.அவரின்் ் மாணவராகவும்,அப்பழுகற்றத் தொண்டராகவும் திகழக்கூடிய சகோதரர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வெற்றி சமுதாயத்தில் மிகப் பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது மட்டுமின்றி,பெருமக்களின் துஆவும் பெருகியிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்,இதே பிரார்த்தனை இல்லங்கள் தோறும் ஒளித்துக் கொண்டிருக்கிரது.இந்த இனிய தகவளின்படி கடல் கடந்து வாழும் சமுதாய பந்தங்களும்,தாய்ச் சபை சொந்தங்களும்,தங்களின் பங்களிப்பாக துஆவோடு மட்டும் நின்று விடாமல்,தங்கள் அருகாமையில் பணிசெய்யக் கூடிய வேலூர் தொகுதியை சேர்ந்த பெருமக்கள் இருப்பார்களேயானால் அவர்களிடமும் நமது வேட்பாளரின் சார்பில் அவர்களின் குடும்ப வாக்குகளை பெற முயற்சிக்கவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அறுபது ஆண்டு கால அரசியல் வரலாற்றில் சமுதாயத்தின் சங்க நாதமாக ஒலிப்பது தாய்ச் சபை முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் தான் என்பது அப்பட்டமான உண்மை!

எல்லாவற்றையும் விவரிக்க இங்கு இடமுமில்லை அதற்க்குரிய நேரமும் இதுவல்ல என்பதனால் இன்றைய தாச் சபை எம்.பி யின் சேவையில் சிலவற்றை மட்டும் உங்கள் கவனத்திற்க்கு காண்பித்தோமே தவிர இது விளம்பரத்திற்காக அல்ல!

சின்னம் என்பது முஸ்லிம் லீக் பணிகளில் சிரமமாகவே இருந்ததில்லை என்பதை சிரஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப்,ஷம்ஷீரே மில்லத் அப்துல் லத்தீப் சாஹிப் போன்ற தலைவர்கள் நிரூபித்துச் சென்றதை இன்று முனீருல் மில்லத் பேராசிரியர் நடைமுறை படுத்திக் கட்டியிருக்கிரார் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்.

இதைக் கூட சொல்ல வேண்டிய நிர்பந்தம் தான்! கவனித்துக் கொண்டிருப்பவர்களின் கவனத்திற்க்காகத்தான் !!!
இப்னு ஷஃபீக்