Showing posts with label பாவம். Show all posts
Showing posts with label பாவம். Show all posts

Wednesday, December 23, 2009

அந்தோ பாவம்...என்ன செய்வார்கள்?

அந்தோ பாவம்...என்ன செய்வார்கள்?

ரங்காநாத் மிஸ்ரா அறிக்கை தாக்கல் எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று வழக்கம் போல் தடுமாறிகள் சொல்லத்துவங்கியது மட்டுமின்றி தங்களின் இணைய தளத்திலும் தம்பட்டம் அடித்துள்ளனர்.அதோடு விட்டார்களா?சம்மந்தமே இல்லாத சிலரின் குரலாலும் வந்தது என்று சொல்லி ,சொல்ல மறந்த கதையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஒப்பற்ற தலைவர்கள் எந்த வித பிரதிபலனையும் பாராமல்,எவருடைய ஓட்டுக்ககவும் எந்தப்பெயரையும் வைக்கத் துணியாதவர்களாக வலம் வந்த சமுதாய பீரங்கிகளின் சங்கநாதத்தையும் இருட்டடிப்பு செய்தது யாருக்காகவும் அல்ல! இன்று பாராளுமன்றத்தில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்சினைக்களை எடுத்து வைப்பதில் சிம்ம சொப்பனமாக திகழும் அறிவுச்சுடர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் அவர்களின் வீரமிக்க உறையை கண்டுதான்!!

இவர்களின் வார்த்தை ஜாலங்களை கேட்டு ஏமந்தது ஒரு காலம் ,இனி அந்தக் காலம் அவர்களுக்கு பொல்லாத காலம் என்பதை மட்டும் சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி!